Ajuda
Deus é nosso auxílio e socorro em todo tempo. Ele não dorme nem cochila. O Senhor é nosso ajudador — não precisamos temer o que o homem possa nos fazer.
வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவாவிடமிருந்தே,
எனக்கு உதவி வரும்.
இறைவன் நமக்கு புகலிடமும் பெலனுமாய் இருக்கிறார்,
ஆபத்துக் காலத்தில் நம்மோடிருந்து உதவுகிறவர் அவரே.
நிச்சயமாக இறைவனே எனக்கு உதவுபவர்;
யெகோவாவே என்னை ஆதரிக்கிறவர்.
நீதிமான்களின் இரட்சிப்பு யெகோவாவிடமிருந்து வரும்;
கஷ்டமான காலத்தில் அவரே அவர்களின் அரணாய் இருக்கிறார்.
யெகோவா அவர்களுக்கு உதவிசெய்து அவர்களை விடுவிக்கிறார்;
அவர்கள் யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைந்திருக்கிறபடியால்,
கொடியவர்களிடமிருந்து அவர்களை விடுவித்து இரட்சிக்கிறார்.
என் இரட்சகராகிய யெகோவாவே,
எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும்.
எங்கள் இரட்சகராகிய இறைவனே,
உமது பெயரின் மகிமையின் நிமித்தம் எங்களுக்கு உதவிசெய்யும்;
உமது பெயரின் நிமித்தம்
எங்களை மீட்டு, எங்கள் பாவங்களை மன்னியும்.
யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும்;
ஏனெனில் இரக்கத்துக்கான எனது கதறலை அவர் கேட்டிருக்கிறார்.
யெகோவாவே என் பெலனும் என் கேடயமுமாயிருக்கிறார்;
என் இருதயம் அவரில் நம்பியிருக்கிறது, அவர் எனக்கு உதவி செய்கிறார்.
என் இருதயம் மகிழ்ச்சியினால் துள்ளுகிறது;
நான் அவருக்குப் பாட்டினால் துதிகளைச் செலுத்துவேன்.
யெகோவா எனக்கு உதவி செய்திருக்காவிட்டால்,
நான் சீக்கிரமாய் மரணத்தின் மவுனத்தில் குடிகொண்டிருந்திருப்பேன்.
ஏனெனில், யெகோவாவாகிய நானே உன் இறைவன்.
நானே உனது வலதுகையைப் பிடித்து,
பயப்படாதே,
உனக்கு நான் உதவி செய்வேன் என்று சொல்கிறவர்.
நீர் உமது இரட்சிப்பை எனக்கு கேடயமாகத் தந்தீர்,
உமது உதவி என்னைப் பெரியவனாக்குகிறது.
"வருத்தத்துடன் மனப்பாரங்களை சுமந்து களைப்புற்றிருக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
நான் உங்களுக்காகப் பிதாவினிடத்தில் வேண்டிக்கொள்வேன். அப்பொழுது அவர் காலமெல்லாம் உங்களுடன் இருக்கும்படி மற்றொரு உதவியாளரை உங்களுக்குக் கொடுப்பார்.
அவ்வேளையில் பரிசுத்த ஆவியானவர் நமது பலவீனத்தில் நமக்கு உதவி செய்கிறார். நாம் எப்படி மன்றாட வேண்டும் என்று நாம் அறியாதிருக்கிறோம். ஆனால் பரிசுத்த ஆவியானவர் தாமே வார்த்தைகளால் விவரிக்க முடியாத தவிப்போடு, நமக்காகப் பரிந்து வேண்டுகிறார். நமது இருதயத்தை ஆராய்கின்ற இறைவன், பரிசுத்த ஆவியானவருடைய மனதையும் அறிவார். ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் இறைவனுடைய சித்தத்திற்கு ஏற்றபடி, பரிசுத்தவான்களுக்காகப் பரிந்துவேண்டுதல் செய்கிறார்.
உன் முழு இருதயத்தோடும் யெகோவாவிடம் நம்பிக்கைவை,
உன் சொந்த அறிவை மட்டுமே சார்ந்திராதே.
நீ செய்யும் எல்லாவற்றிலும் யெகோவாவுக்கே அடங்கியிரு,
அவர் உன்னை சரியான பாதையில் நடத்துவார்.
உங்கள் கவலைகளையெல்லாம் இறைவனிடத்தில் கொடுத்துவிடுங்கள். ஏனெனில் அவர் உங்கள்மேல் அக்கறையுள்ளவராய் இருக்கிறார்.