Bom dia
Cada manhã é presente de Deus. As misericórdias do Senhor se renovam cada dia. A Bíblia convida a começar o dia com louvor, oração e gratidão ao Criador.
Manhã com Deus
De manhã te apresentarei a minha oração. Pela manhã ouvirás a minha voz — eu te busco ao despertar.
யெகோவாவே, காலையிலே என் குரலைக் கேளும்;
நான் என் வேண்டுதல்களைக் காலையில் உம்முன் வைத்து,
எதிர்பார்ப்புடன் காத்திருப்பேன்.
ஆனாலும் யெகோவாவே, நான் உதவிகேட்டு உம்மை நோக்கிக் கதறுகிறேன்;
காலையிலே எனது மன்றாட்டு உமக்கு முன்பாக வருகிறது.
என் ஆத்துமாவே, விழித்தெழும்பு!
யாழே, வீணையே, விழித்தெழுங்கள்!
நான் அதிகாலையில் விழித்தெழுவேன்.
ஆனால் நானோ, உமது பெலனைக் குறித்துப் பாடுவேன்;
காலையிலே உமது உடன்படிக்கையின் அன்பை குறித்துப் பாடுவேன்;
ஏனெனில் நீரே எனது கோட்டையும்
துன்பகாலங்களில் என் புகலிடமுமாய் இருக்கிறீர்.
ஆனால் நானோ, உமது பெலனைக் குறித்துப் பாடுவேன்;
காலையிலே உமது உடன்படிக்கையின் அன்பை குறித்துப் பாடுவேன்;
ஏனெனில் நீரே எனது கோட்டையும்
துன்பகாலங்களில் என் புகலிடமுமாய் இருக்கிறீர்.
என் பெலனே, நான் உமக்குத் துதி பாடுவேன்;
இறைவனே, நீரே என் கோட்டையும்,
என் அன்பான இறைவனுமாயிருக்கிறீர்.
காலை வேளையானது உமது உடன்படிக்கையின் அன்பின் செய்தியைக் கொண்டுவரட்டும்,
ஏனெனில் நான் என் நம்பிக்கையை உம்மிலேயே வைத்திருக்கிறேன்;
நான் போகவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்,
ஏனெனில் என் உயிரை உம்மிடத்தில் ஒப்படைக்கிறேன்.
நானோ, நீதியில் உமது முகத்தைக் காண்பேன்;
நான் விழித்தெழும்போது உம்மைக் கண்டு திருப்தியடைவேன்.
Misericórdias renovadas
As misericórdias do Senhor se renovam cada manhã. Este é o dia que o Senhor fez — alegremo-nos e nos regozijemos nele.
அதாவது யெகோவாவின் பெரிதான அன்பினாலே நாம் அழிக்கப்படாமலிருக்கிறோம்.
ஏனெனில் அவரது இரக்கத்திற்கு முடிவேயில்லை.
உமது அன்பும் இரக்கமும் காலைதோறும் புதிதாயிருக்கின்றன;
உமது உண்மை பெரியது.
நான் எனக்குள் சொல்லிக்கொள்கிறேன், "யெகோவாவே என் உரிமைப் பங்கு;
ஆகையால் நான் அவருக்காகக் காத்திருப்பேன்."
அதாவது யெகோவாவின் பெரிதான அன்பினாலே நாம் அழிக்கப்படாமலிருக்கிறோம்.
ஏனெனில் அவரது இரக்கத்திற்கு முடிவேயில்லை.
உமது அன்பும் இரக்கமும் காலைதோறும் புதிதாயிருக்கின்றன;
உமது உண்மை பெரியது.
யெகோவா உண்டாக்கின நாள் இதுவே;
இதிலே நாம் மகிழ்ந்து களிகூருவோம்.
யெகோவாவினுடைய பரிசுத்தவான்களே, நீங்கள் அவருக்குத் துதி பாடுங்கள்;
அவருடைய பரிசுத்தத்தை நினைத்து நன்றி கூறுங்கள்.
அவருடைய கோபம் ஒரு விநாடி மட்டுமே,
ஆனால் அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்;
இரவிலே அழுகை இருந்தாலும்,
காலையிலோ மகிழ்ச்சி வரும்.
அவருடைய கோபம் ஒரு விநாடி மட்டுமே,
ஆனால் அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்;
இரவிலே அழுகை இருந்தாலும்,
காலையிலோ மகிழ்ச்சி வரும்.
பூமியின் கடைசிகளில் வாழ்பவர்களும்
உம்முடைய அதிசயங்களைக் குறித்துப் பயப்படுகிறார்கள்.
விடியும் திசையிலிருந்தும் மாலைமங்கும் திசையிலிருந்தும்
நீர் மகிழ்ச்சியின் பாடல்களைத் தொனிக்கப் பண்ணுகிறீர்.
காலையிலே எங்களை உமது உடன்படிக்கையின் அன்பினால் திருப்தியாக்கும்;
அப்பொழுது நாங்கள் இன்பமாய்ப் பாடி,
எங்கள் வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியாய் இருப்போம்.
Louvor matinal
Saciai-nos de manhã com a tua benignidade. Todo dia te louvarei e celebrarei o teu nome para sempre.
என் அரசராகிய இறைவனே, நான் உம்மைப் புகழ்ந்து உயர்த்துவேன்;
நான் என்றென்றும் உம்முடைய பெயரைத் துதிப்பேன்.
நாள்தோறும் நான் உம்மைத் துதித்து,
உம்முடைய பெயரை என்றென்றைக்கும் பாராட்டுவேன்.
யெகோவாவைத் துதிப்பதும், உன்னதமானவரே,
உமது பெயரைப் புகழ்ந்து பாடுவதும் நல்லது.
காலையிலே உமது அன்பையும்
இரவிலே உமது உண்மையையும் அறிவிப்பது நல்லது.
யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;
பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவுக்குத் துதி பாடுங்கள்.
யெகோவாவுக்குத் துதி பாடுங்கள், அவர் பெயரைத் துதியுங்கள்,
நாள்தோறும் அவருடைய இரட்சிப்பை அறிவியுங்கள்.
நாடுகளுக்குள்ளே அவரது மகிமையையும்,
மக்கள் எல்லோருக்கும் அவரது அற்புத செயல்களையும் அறிவியுங்கள்.
ஆ, உமது சட்டத்தை நான் எவ்வளவாய் நேசிக்கிறேன்!
நாள்முழுவதும் நான் அதை தியானிக்கிறேன்.
பகலில் யெகோவா தமது உடன்படிக்கையின் அன்பை எனக்குக் கொடுக்கிறார்;
இரவிலோ, அவருடைய பாடல் என்னோடு இருக்கிறது;
என் வாழ்வின் இறைவனை நோக்கிய மன்றாட்டாகவே அது இருக்கிறது.
யெகோவாவே, எங்கள்மேல் கிருபையாயிரும்;
நாங்கள் உமக்குக் காத்திருக்கிறோம்.
காலைதோறும் எங்கள் பெலனாயும்,
துயரப்படும் வேளையில் எங்கள் மீட்பருமாயிரும்.
இளைத்துப்போனவனை உற்சாகப்படுத்தும்படி, என்ன வார்த்தையை சொல்ல
நான் அறிந்திட ஆண்டவராகிய யெகோவா போதிக்கும் நாவை எனக்குக் கொடுத்திருக்கிறார்;
காலைதோறும் அவர் என்னை எழுப்புகிறார்,
ஒரு சீடனைப்போல் நான் கவனமாய் கேட்கும்படி
அவர் எனது செவிப் புலனைத் தட்டி எழுப்புகிறார்.
Graça para o novo dia
O Senhor te abençoe e te guarde. Cada novo dia é oportunidade de viver sob a graça do Deus que nos ama.
" ‘ "யெகோவா உங்களை ஆசீர்வதித்து,
உங்களைக் காப்பாராக;
யெகோவா உங்கள்மேல் தமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணி,
உங்களுடன் கிருபையாய் இருப்பாராக.
யெகோவா தமது முகத்தை உங்கள் பக்கமாய் திருப்பி,
உங்களுக்குச் சமாதானம் கொடுப்பாராக." ’
உனது தானியத்தைக் காலையில் விதை,
பிற்பகல் முழுவதும் உனது கைகளை நெகிழவிடாமல் விதை.
இதுவோ, அதுவோ,
எது பலன் தரும் என்பது உனக்குத் தெரியாதே;
ஒருவேளை இரண்டுமே நல்ல பலனைக் கொடுக்கலாம்.
அவள் விடியுமுன்னே இருட்டோடே எழும்புகிறாள்;
அவள் தன் குடும்பத்திற்கு உணவை ஆயத்தப்படுத்தி,
தன் வேலைக்காரிகளுக்கு பகிர்ந்து கொடுக்கிறாள்.
தூக்கத்தை விரும்பாதே, நீ ஏழையாவாய்;
விழிப்பாயிரு, அப்பொழுது திருப்தியான உணவைப் பெறுவாய்.
ஒளி நல்லது என்று இறைவன் கண்டார், அவர் இருளிலிருந்து ஒளியைப் பிரித்தார். இறைவன் ஒளிக்குப் "பகல்" என்றும் இருளுக்கு "இரவு" என்றும் பெயரிட்டார். மாலையும் காலையுமாகி முதலாம் நாள் ஆயிற்று.
இவற்றையும்விட வெகு நிச்சயமான இறைவாக்கினர்களின் வார்த்தைகளையும் நாங்கள் பெற்றுக்கொண்டுள்ளோம். பொழுது புலர்ந்து, உங்கள் இருதயங்களில் கிறிஸ்து விடிவெள்ளிபோல் உதிக்குமளவும், இருளான இடத்தில் ஒளிவீசும் வெளிச்சம்போன்ற அந்த இறைவார்த்தைக்குக் கவனம் செலுத்தினால், நீங்கள் நலன்பெறுவீர்கள்.
நாம் உயிருடன் இருந்தாலும், மரண நித்திரை அடைந்தாலும் கிறிஸ்துவுடன் ஒன்றாய் வாழும்படியாக, அவர் நமக்காக இறந்தார்.