Confiar no Senhor
Confiar no Senhor é a base de toda vida espiritual. A confiança em Deus nos livra do medo, nos dá paz e nos posiciona para receber as promessas divinas.
Confiar de todo coração
Confia no Senhor de todo o coração. Não te apoies em teu próprio entendimento — em todos os caminhos o reconheça.
உன் முழு இருதயத்தோடும் யெகோவாவிடம் நம்பிக்கைவை,
உன் சொந்த அறிவை மட்டுமே சார்ந்திராதே.
நீ செய்யும் எல்லாவற்றிலும் யெகோவாவுக்கே அடங்கியிரு,
அவர் உன்னை சரியான பாதையில் நடத்துவார்.
மகா உன்னதமானவரின் அடைக்கலத்தில் வாழ்கிறவன்,
எல்லாம் வல்லவரின் நிழலில் இளைப்பாறுவான்.
நான் யெகோவாவைக் குறித்து, "அவரே என் புகலிடம், என் கோட்டை,
நான் நம்பியிருக்கிற என் இறைவன்" என்று சொல்வேன்.
நிச்சயமாகவே அவர் உன்னை
வேடனுடைய கண்ணியிலிருந்தும்,
கொன்றழிக்கும் கொள்ளைநோயிலிருந்தும் தப்புவிப்பார்.
யெகோவா தமது சிறகுகளால் உன்னை மூடுவார்;
அவருடைய சிறகுகளின் கீழே நீ புகலிடம் காண்பாய்;
அவருடைய சத்தியம் உனது கேடயமும் கவசமுமாயிருக்கும்.
யெகோவாவை நம்புகிறவர்கள் சீயோன் மலையைப்போல்
என்றென்றும் அசையாமல் நிலைத்திருப்பார்கள்.
மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருப்பதைப்போல்,
யெகோவா இப்பொழுதும் எப்பொழுதும்
தமது மக்களைச் சுற்றியிருக்கிறார்.
துர்ச்செய்தியின் பயம் அவனுக்கு இருக்காது;
அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பி உறுதியாய் இருக்கிறது.
யெகோவாவிடம் நம்பிக்கையாயிருந்து நன்மைசெய்;
நாட்டில் குடியிருந்து, பாதுகாப்பாய் மேய்ச்சலில் மகிழ்ந்திரு.
யெகோவாவிடம் மனமகிழ்ச்சியாயிரு,
அப்பொழுது அவர் உன் இருதயத்தின் வாஞ்சைகளை உனக்குத் தருவார்.
யெகோவாவிடம் உன் வழியை ஒப்புவி;
அவரில் நம்பிக்கையாயிரு, அப்பொழுது அவர் உனக்காக இவைகளைச் செய்வார்.
அவர் உன் நீதியை காலை வெளிச்சத்தைப் போலவும்,
உன் நியாயத்தை பட்டப்பகலைப் போலவும் ஒளிரச் செய்வார்.
உமது பெயரை அறிந்தவர்கள் உம்மில் நம்பிக்கை வைப்பார்கள்;
ஏனெனில் யெகோவாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் ஒருபோதும் கைவிடுவதில்லை.
Segurança em Deus
Bem-aventurado o homem que confia no Senhor. Ele é como árvore plantada junto às águas — não temerá quando vier o calor.
"ஆனால் யெகோவாவிடம் நம்பிக்கை வைத்து,
அவரை உறுதியாய் நம்புகிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
அவன் தண்ணீரின் ஓரத்தில் நடப்பட்டு
நீரூற்றருகில் தனது வேர்களை விடும் மரத்தைப்போல இருப்பான்.
வெப்பம் வரும்போது அது பயப்படுவதில்லை.
எப்போதும் அதன் இலைகள் பச்சையாயிருக்கும்.
வறட்சியான வருடத்தில் அதற்குக் கவலை இல்லை.
அது பழங்கொடுக்கத் தவறுவதில்லை."
யெகோவாவிடம் என்றென்றும் நம்பிக்கையை வையுங்கள்;
ஏனெனில், யெகோவா, யெகோவாவே நித்திய கற்பாறை.
நிச்சயமாய் இறைவனே என் இரட்சிப்பு;
நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்.
யெகோவா, யெகோவாவே என் பெலன், என் பாடல்;
அவரே எனது இரட்சிப்பும் ஆகினார்" என்று சொல்வாய்.
சர்வ வல்லமையுள்ள யெகோவாவே,
உம்மில் நம்பிக்கையாயிருக்கிற மனிதர் ஆசீர்வதிக்கப்பட்டவர்.
சிலர் தேர்களிலும் சிலர் குதிரைகளிலும் நம்பிக்கை வைக்கிறார்கள்;
ஆனால் நாங்களோ, நமது இறைவனாகிய யெகோவாவினுடைய பெயரிலேயே நம்பிக்கை வைக்கிறோம்.
அவர்கள் மண்டியிட்டு விழுந்தார்கள்,
நாங்களோ எழுந்து உறுதியாய் நிற்கிறோம்.
மனிதனில் நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும்,
யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைவதே மேலானது.
அதிகாரிகள் மீது நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும்,
யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைவதே சிறந்தது.
Não confiar no homem
Não temas — em ti confiarei. Melhor é confiar no Senhor do que confiar no homem ou nos príncipes.
நான் இறைவனுடைய வார்த்தையைப் புகழ்வேன்;
யெகோவாவினுடைய வார்த்தையைப் புகழ்வேன்.
நான் இறைவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன்;
மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?
ஆனால் நானோ, உமது உடன்படிக்கையின் அன்பில் நம்பிக்கையாய் இருக்கிறேன்;
என் இருதயம் உமது இரட்சிப்பில் மகிழ்கிறது.
ஆனாலும் யெகோவாவே, நான் உம்மிலேயே நம்பிக்கையாய் இருக்கிறேன்;
"நீரே என் இறைவன்" என்று நான் சொன்னேன்.
பொய்யான கடவுள்களைப் பற்றிக்கொள்ளாமலும்,
அகந்தை உள்ளவர்களைச் சாராமலும்,
யெகோவாவைத் தனது நம்பிக்கையாகக் கொண்டிருக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
இயேசு தமது சீடர்களை ஆறுதல்படுத்துதல்
"உங்கள் இருதயம் கலங்குவதற்கு இடங்கொடுக்க வேண்டாம். இறைவனில் விசுவாசமாயிருங்கள்; என்னிலும் விசுவாசமாயிருங்கள்.