Dinheiro
O dinheiro é ferramenta que pode ser usada para o bem ou para o mal. A Bíblia nos ensina a administrar recursos com sabedoria, generosidade e temor ao Senhor.
Perspectiva bíblica
Guardai-vos da avareza. A vida não consiste na abundância de bens. O dinheiro é servo, nunca senhor.
பின்பு இயேசு அவர்களிடம், "எச்சரிக்கையாயிருங்கள்! எல்லா விதமான பேராசைகளைக் குறித்தும் கவனமாய் இருங்கள்; ஒரு மனிதனின் வாழ்க்கை, அவனிடம் இருக்கும் உடைமைகளின் நிறைவில் தங்கியிருப்பதில்லை" என்றார்.
ஏனெனில் உங்கள் செல்வம் எங்கே இருக்கிறதோ, அங்குதான் உங்கள் இருதயமும் இருக்கும்.
"அதற்கு அவனுடைய எஜமான், ‘நன்றாய் செய்தாய், உண்மையுள்ள நல்ல வேலைக்காரனே! நீ கொஞ்சக் காரியத்தில் உண்மையுள்ளவனாய் இருந்தாய்; அதனால் நான் உன்னை அநேக காரியங்களுக்குப் பொறுப்பாக வைப்பேன். வந்து உனது எஜமானின் மகிழ்ச்சியில் பங்குகொள்’ என்றான்.
கண் இமைக்கும் நேரத்தில் செல்வம் மறைந்துவிடும்,
அவை இறக்கைகள் முளைத்து,
கழுகுபோல் ஆகாயத்தில் பறந்துவிடும்.
பழமொழி 8
நீ செல்வந்தனாகும்படி உன்னை வருத்தாதே;
உன் புத்திசாலித்தனத்தை நம்பாதே.
பணத்தில் ஆசைகொள்கிற எவனுக்கும்
தனக்கு இருக்கும் பணம் ஒருபோதும் போதுமானதாயிராது;
செல்வத்தில் ஆசைகொள்கிற எவனும் தன் வருமானத்தில்
ஒருபோதும் திருப்தி அடைவதில்லை;
இதுவும்கூட அர்த்தமற்றதே.
Administrar com sabedoria
Honra ao Senhor com as tuas primícias. O sábio administra seus recursos com prudência e visão de eternidade.
நீ உன் செல்வத்தினாலும்,
உனது எல்லா விளைச்சலின் முதற்பலனினாலும் யெகோவாவைக் கனம்பண்ணு.
யெகோவாவின் ஆசீர்வாதம் செல்வத்தைக் கொண்டுவருகிறது;
அதனுடன் அவர் துன்பத்தைச் சேர்க்கமாட்டார்.
நீதியற்ற வழியில் சம்பாதித்த செல்வம் பயனற்றது,
ஆனால் நீதியோ ஒருவனை மரணத்திலிருந்து விடுவிக்கிறது.
தவறான வழியில் சம்பாதித்த பணம் அழிந்துபோகும்,
ஆனால் சிறிது சிறிதாக உழைத்துச் சேகரிக்கிறவர்கள் அதை அதிகரிக்கச் செய்வார்கள்.
தங்கத்தைவிட ஞானத்தைப் பெறுவதும்
வெள்ளியைவிட மெய்யறிவைப் பெறுவதும் எவ்வளவு சிறந்தது!
அதிக செல்வத்தைவிட நற்பெயரே விரும்பத்தக்கது;
வெள்ளியையும் தங்கத்தையும்விட நன்மதிப்பைப் பெறுவதே சிறந்தது.
அதிக செல்வமும் அதனோடு கலக்கமும் இருப்பதைவிட,
சிறிதளவு செல்வமும் அதனோடு யெகோவாவுக்குப் பயந்து நடத்தலும் இருப்பது சிறந்தது.
எல்லோரும் நேர்மையான அன்பையே விரும்புகிறார்கள்;
பொய்யராய் இருப்பதைவிட ஏழையாய் இருப்பது சிறந்தது.
மாயையையும் பொய்களையும் என்னைவிட்டுத் தூரமாக்கும்;
எனக்கு வறுமையையோ, செல்வத்தையோ கொடுக்கவேண்டாம்,
ஆனால் அன்றன்றைக்குரிய உணவை மட்டும் எனக்குத் தாரும்.
Perigos e armadilhas
Quem quer enriquecer cai em tentação. Fuja do amor ao dinheiro e busque contentamento no Senhor.
செல்வந்தர்களாக இருக்க விரும்பும் மக்களோ, சோதனைக்குள்ளும் கண்ணிக்குள்ளும் விழுவதோடு, மூடத்தனமான கேடு விளைவிக்கும் அநேக ஆசைகளுக்குள்ளும் விழுகிறார்கள்; இவை மனிதரைப் பாழாக்கும் அழிவுக்குள் அமிழ்த்துகின்றன.
இந்த உலகத்தில் செல்வந்தர்களாய் இருக்கிறவர்களிடம், அகந்தை உடையவர்களாய் இருக்கவேண்டாம் என்றும், அவர்களுடைய நம்பிக்கையை நிலையற்ற செல்வத்தின்மேல் வைக்கவேண்டாம் என்றும் கட்டளையிடு. நாம் அனுபவித்து மகிழும்படி எல்லாவற்றையும் நிறைவாக நமக்குக் கொடுக்கும் இறைவனில் அவர்களுடைய நம்பிக்கையை, வைக்கும்படி கட்டளையிடு.
பண ஆசையிலிருந்து விலகி, உங்களிடம் இருப்பதைக்கொண்டு மனத்திருப்தியுடன் வாழுங்கள். ஏனெனில் இறைவன்,
"நான் உன்னைவிட்டு ஒருபோதும் விலகமாட்டேன்;
நான் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்"
என்று சொல்லியிருக்கிறாரே.
நியாயத்தீர்ப்பின் நாளில் செல்வம் பயனற்றது;
ஆனால் நீதி மரணத்தினின்று விடுவிக்கும்.
பணக்காரர்களின் செல்வம் அவர்களுடைய அரணான பட்டணம்;
அதை அவர்கள் பாதுகாப்பான சுவரென்று எண்ணுகிறார்கள்.
Tudo vem de Deus
De ti vem tudo, e das tuas mãos to damos. Os tributos são devidos — dai a César o que é de César e a Deus o que é de Deus.
"இவ்வாறு தாராளமாய் காணிக்கை கொடுக்கும்படி தகுதி உண்டாவதற்கு நான் யார்? எனது மக்கள் யார்? எல்லாம் உம்மிடமிருந்தே வருகின்றன. உமது கரத்திலிருந்து பெற்றதையே உமக்குக் கொடுக்கிறோம்.
நீங்கள் ஒவ்வொருவனுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுங்கள். நீங்கள் வரிசெலுத்த வேண்டியிருந்தால் வரியைச் செலுத்துங்கள்; சுங்கவரி செலுத்த வேண்டுமானால் அதைச் செலுத்துங்கள்; மரியாதை செலுத்த வேண்டுமானால் மரியாதை செலுத்துங்கள். கனம்பண்ண வேண்டுமானால் கனம்பண்ணுங்கள்.
அதற்காகத்தான் நீங்கள் வரிகளையும் செலுத்துகிறீர்கள். ஏனெனில் அதிகாரத்தில் உள்ளவர்கள் இறைவனுடைய வேலைக்காரர்கள். அவர்கள் ஆளுகை செய்யும் பணியில் தங்களது முழு நேரத்தையும் செலவிடுகிறார்கள்.
கொடியவர்களின் மிகுந்த செல்வத்தைப் பார்க்கிலும்,
நீதிமான்களிடம் இருக்கும் சிறிதளவே சிறந்தது.
ஏனெனில் கொடியவர்களின் பலம் உடைக்கப்படும்;
நீதிமான்களையோ யெகோவா தாங்குகிறார்.
ஒருவன் பெரும் செல்வத்தில் மகிழ்வதுபோல்,
நான் உமது நியமங்களைப் பின்பற்றுவதில் மகிழ்கிறேன்.