Esperar no Senhor
Esperar no Senhor é ato de fé e confiança. A Bíblia promete que os que esperam em Deus renovam as forças, recebem direção e experimentam a fidelidade divina no tempo certo.
Renovar as forças
Os que esperam no Senhor renovam as forças. Sobem como águias, correm e não se cansam, caminham e não se fatigam.
ஆனால், யெகோவாவிடம் நம்பிக்கையோடேக் காத்திருப்போர்
தங்கள் பெலனைப் புதுப்பித்துக்கொள்வார்கள்.
அவர்கள் கழுகுகளைப்போல் சிறகுகளை விரித்து உயரே பறப்பார்கள்;
அவர்கள் ஓடுவார்கள், சோர்வடையமாட்டார்கள்;
அவர்கள் நடப்பார்கள், களைப்படையமாட்டார்கள்.
அப்படியிருந்தும், யெகோவா உங்கள்மேல் கிருபை காட்ட ஆவலாய் இருக்கிறார்;
உங்களுக்கு இரக்கங்காட்டுவதற்கு எழும்புகிறார்.
ஏனெனில், யெகோவா நீதியுள்ள இறைவன்.
அவருக்காக காத்திருப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
யெகோவாவுக்குக் காத்திரு;
பெலன்கொண்டு தைரியமாயிரு,
யெகோவாவுக்கே காத்திரு.
நானோ வாழ்வோரின் நாட்டில்
யெகோவாவின் நன்மையைக் காண்பேன் என்று
இதில் நான் நம்பிக்கையாயிருக்கிறேன்.
யெகோவாவுக்குக் காத்திரு;
பெலன்கொண்டு தைரியமாயிரு,
யெகோவாவுக்கே காத்திரு.
யெகோவா என் வெளிச்சமும் இரட்சிப்புமாயிருக்கிறார்,
நான் யாருக்குப் பயப்படுவேன்?
யெகோவா என் வாழ்க்கையின் அரணாய் இருக்கிறார்,
நான் யாருக்குப் பயப்படுவேன்?
தீய மனிதர் என்னை விழுங்கும்படி
எனக்கு விரோதமாக முன்னேறி வரும்போது,
எனது பகைவரும் விரோதிகளுமான
அவர்களே தடுமாறி விழுவார்கள்.
ஒரு இராணுவம் என்னை முற்றுகையிட்டாலும்,
என் இருதயம் பயப்படாது;
எனக்கு விரோதமாக யுத்தம் மூண்டாலும்,
அப்பொழுதுங்கூட நான் நம்பிக்கையோடே இருப்பேன்.
நான் யெகோவாவிடத்தில் ஒன்றைக் கேட்கிறேன்,
அதையே நான் தேடுகிறேன்:
நான் யெகோவாவின் அழகைக் காண்பதற்கும்,
அவருடைய ஆலயத்தில் அவரை தேடுவதற்கும்
நான் என் வாழ்நாள் முழுவதும்
யெகோவாவினுடைய வீட்டில் குடியிருப்பதையே வாஞ்சிக்கிறேன்.
ஏனெனில் துன்ப நாளில்,
அவர் என்னைத் தமது அடைக்கலத்தில் வைத்து காத்துக்கொள்ளுவார்;
அவர் என்னைத் தமது பரிசுத்த கூடார மறைவில் ஒளித்துவைத்து,
கற்பாறையின்மேல் என்னை உயர்த்துவார்.
அப்பொழுது என் தலை என்னைச் சுற்றியுள்ள
பகைவர்களுக்கு மேலாக உயர்த்தப்படும்;
அவருடைய பரிசுத்த கூடாரத்திலே நான் ஆனந்த சத்தத்தோடு பலிகளையிட்டு,
யெகோவாவைப் புகழ்ந்து பாடுவேன்.
யெகோவாவே, நான் உம்மைக் கூப்பிடும்போது என் குரலைக் கேளும்;
என்னில் இரக்கமாயிருந்து, எனக்குப் பதில் தாரும்.
என் இருதயம் உம்மிடத்தில், "அவர் முகத்தையே தேடு!" என்றதால்,
யெகோவாவே, உமது முகத்தையே நான் தேடுவேன்.
உமது முகத்தை என்னிடமிருந்து மறைத்துக் கொள்ளாதேயும்;
கோபங்கொண்டு உமது அடியேனைத் துரத்தி விடாதேயும்;
நீரே எனக்கு உதவியாய் இருந்திருக்கிறீர்.
என் இரட்சிப்பின் இறைவனே,
என்னைப் புறக்கணிக்கவோ, கைவிடவோ வேண்டாம்.
என் தந்தையும் தாயும் என்னைக் கைவிட்டாலும்,
யெகோவா என்னை ஏற்றுக்கொள்வார்.
யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்;
என்னைத் தீயநோக்கத்தோடு பார்த்துக் கொண்டிருப்பவர்களின் நிமித்தம்
என்னை நேரான பாதையில் நடத்தும்.
என் பகைவரின் ஆசைகளுக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்;
ஏனெனில் பொய்ச்சாட்சி கூறுபவர்களும்
என்னை குற்றஞ்சாட்டுபவர்களும் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்.
நானோ வாழ்வோரின் நாட்டில்
யெகோவாவின் நன்மையைக் காண்பேன் என்று
இதில் நான் நம்பிக்கையாயிருக்கிறேன்.
யெகோவாவுக்குக் காத்திரு;
பெலன்கொண்டு தைரியமாயிரு,
யெகோவாவுக்கே காத்திரு.
Espera paciente
Esperei com paciência no Senhor e Ele se inclinou para mim. Confie nele e descanse — Ele agirá no tempo certo.
நான் யெகோவாவுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்;
அவர் என் பக்கமாய்த் திரும்பி என் கதறுதலைக் கேட்டார்.
அழிவின் குழியிலிருந்தும்
மண் சகதியிலிருந்தும் அவர் என்னை வெளியே தூக்கியெடுத்தார்,
அவர் கற்பாறைமேல் என் கால்களை நிறுத்தி,
நிற்பதற்கு ஒரு உறுதியான இடத்தையும் எனக்குக் கொடுத்தார்.
எங்கள் இறைவனைத் துதிக்கும் ஒரு துதியின் கீதமான
புதுப்பாட்டை அவர் என் வாயிலிருந்து வரச்செய்தார்.
அநேகர் அதைக்கண்டு பயந்து,
யெகோவாவிடம் தங்கள் நம்பிக்கையை வைப்பார்கள்.
பொய்யான கடவுள்களைப் பற்றிக்கொள்ளாமலும்,
அகந்தை உள்ளவர்களைச் சாராமலும்,
யெகோவாவைத் தனது நம்பிக்கையாகக் கொண்டிருக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
என் இறைவனாகிய யெகோவாவே,
நீர் எங்களுக்காக செய்துள்ள அதிசயங்களும்
உம்முடைய திட்டங்களும் அநேகம்.
உமக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை;
அவைகளைக் குறித்து நான் விவரிக்கப்போனால்,
அவை எடுத்துரைக்க முடியாதளவு ஏராளமானவைகள்.
பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை;
தகன காணிக்கைகளும் பாவநிவாரண காணிக்கைகளும் உமக்குத் தேவையில்லை;
ஆனால் நான் கேட்டுக் கீழ்ப்படிவதற்கு என் செவிகளைத் திறந்துவிட்டீர்.
அப்பொழுது நான், "இதோ, நான் வருகிறேன்;
புத்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறதே.
என் இறைவனே, நான் உமது விருப்பத்தைச் செய்ய விரும்புகிறேன்;
உமது சட்டம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது" என்று சொன்னேன்.
மகா சபையில் உமது நீதியை பிரசித்தப்படுத்துகிறேன்;
யெகோவாவே, நீர் அறிந்திருக்கிறபடி
நான் என் உதடுகளை மூடுவதில்லை.
நான் உமது நீதியை என் உள்ளத்தில் மறைப்பதில்லை;
உமது உண்மையையும்,
இரட்சிப்பையும் குறித்து நான் பேசுகிறேன்.
உமது உடன்படிக்கையின் அன்பையும் உண்மையையும் மகா சபைக்கு நான் மறைக்கவுமில்லை.
யெகோவாவே, எனக்கு இரக்கத்தைக் காட்டாமல் விடாதேயும்;
உமது உடன்படிக்கையின் அன்பும் உமது உண்மையும் எப்போதும் என்னைப் பாதுகாப்பதாக.
ஏனெனில் எண்ணற்ற இன்னல்கள் என்னைச் சூழ்கின்றன;
என் பாவங்கள் என்னை மூடிக்கொண்டதால், நான் பார்க்க முடியாதிருக்கிறேன்.
என் தலையிலுள்ள முடியைப் பார்க்கிலும், அவைகள் அதிகமானவை;
அதினால் என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது.
யெகோவாவே, தயவுசெய்து என்னைக் காப்பாற்றும்;
யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும்.
என் உயிரை அழிக்கத் தேடுகிற யாவரும்
வெட்கப்பட்டுக் குழப்பமடைவார்களாக;
எனது அழிவை விரும்புகிற யாவரும்
அவமானமடைந்து திரும்புவார்களாக.
நாங்கள் யெகோவாவுக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்;
அவரே எங்களுக்கு உதவியும் எங்கள் கேடயமுமாய் இருக்கிறார்.
நாங்கள் அவருடைய பரிசுத்த பெயரில் நம்பிக்கையாய் இருப்பதால்
எங்கள் இருதயங்கள் அவரில் மகிழ்கின்றன.
யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே,
உமது உடன்படிக்கையின் அன்பு எங்கள்மேல் இருப்பதாக.
நான் யெகோவாவுக்காகக் காத்திருக்கிறேன், என் ஆத்துமா காத்திருக்கிறது;
அவருடைய வார்த்தையிலேயே என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன்.
விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும்,
ஆம், விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும்,
என் ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது.
ஆம், என் ஆத்துமாவே, நீ இறைவனில் மட்டுமே இளைப்பாறு;
என் நம்பிக்கை அவரிடத்தில் இருக்கிறது.
யெகோவாவை எதிர்பார்த்திருந்து,
அவருடைய வழியைக் கைக்கொள்.
நீ நாட்டை சொந்தமாக்கிக் கொள்ளும்படி, அவர் உன்னை உயர்த்துவார்;
கொடியவர்கள் அழிந்துபோவார்கள், நீ அதைக் காண்பாய்.
Confiança e perseverança
Confie no Senhor de todo o coração. Sede pacientes na tribulação — o Senhor é fiel e cumprirá todas as suas promessas.
உன் முழு இருதயத்தோடும் யெகோவாவிடம் நம்பிக்கைவை,
உன் சொந்த அறிவை மட்டுமே சார்ந்திராதே.
நீ செய்யும் எல்லாவற்றிலும் யெகோவாவுக்கே அடங்கியிரு,
அவர் உன்னை சரியான பாதையில் நடத்துவார்.
அதுமாத்திரமல்ல, நம்முடைய துன்பங்களிலேயும் நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஏனெனில் துன்பங்கள் பொறுமையையும், பொறுமை நற்பண்பையும், நற்பண்பு எதிர்பார்ப்பையும் உண்டாக்கும் என்று நாங்கள் அறிவோம்.
இறைவனுடைய மகிமையான ஆற்றலிலிருந்து வரும், எல்லா வல்லமையினாலும் நீங்கள் பெலப்பட வேண்டும் என்றும் மன்றாடுகிறோம். அப்பொழுது நீங்கள் மிகுந்த சகிப்புத்தன்மை உடையவர்களும், பொறுமையுடையவர்களுமாய் இருந்து,
துன்பத்தில் பொறுமை
ஆகையால் பிரியமானவர்களே, கர்த்தருடைய வருகைவரைக்கும் பொறுமையுள்ளவர்களாக இருங்கள். இதோ, நிலம் அதன் மதிப்புமிக்க விளைச்சலைக் கொடுக்கும்வரைக்கும் பயிரிடுகிறவன் எவ்வளவாய் காத்திருக்கிறான். அவன் கோடை மழைக்காகவும், மாரி மழைக்காகவும் எவ்வளவு பொறுமையாகக் காத்திருக்கிறான். நீங்களும் பொறுமையுடையவர்களாய், உறுதியுடன் நில்லுங்கள். ஏனெனில் கர்த்தருடைய வருகை நெருங்கி இருக்கிறது.
நீங்கள் அறிந்திருக்கிறபடி, சகிப்புடன் செயல்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று நாங்கள் எண்ணுகிறோமே. யோபுவின் சகிப்புத் தன்மையைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். இறுதியில் கர்த்தர் என்ன செய்தார் என்பதையும் கண்டுகொண்டீர்கள். கர்த்தர் மனதுருக்கமும் இரக்கமும் நிறைந்தவராய் இருக்கிறாரே.
இப்பொழுது நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்ததினாலே, உங்களைச் சுத்திகரித்துக்கொண்டீர்கள். இதனால் உங்கள் சகோதரரைக்குறித்து உண்மையான அன்புள்ளவர்களாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒருவரில் ஒருவர் உண்மையான உள்ளத்துடன் ஆழ்ந்த அன்பு செலுத்துங்கள். ஏனெனில், நீங்கள் புதிதான பிறப்பைப் பெற்றிருக்கிறீர்கள். இந்த பிறப்பு அழிந்துபோகின்ற விதையினால் உண்டாகவில்லை. அழியாத விதையான இறைவனுடைய வார்த்தையினாலேயே உண்டானது. அந்த வார்த்தை உயிருள்ளதும் நிலைத்து நிற்பதுமானது. ஏனெனில்,
"எல்லா மனிதரும் புல்லைப் போன்றவர்கள்.
அவர்களின் மகிமை எல்லாம் வயல்வெளியின் பூக்களைப் போன்றன.
புல் வாடுகிறது, பூக்கள் உதிருகின்றன,
ஆனால் இறைவனின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கிறது" (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்)
என்று இந்த வார்த்தை உங்களுக்கு நற்செய்தியாய் பிரசங்கிக்கப்பட்டது.
கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதில் தாமதம் செய்கிறார் என்று சிலர் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் விளங்கிக்கொள்கிறவிதத்தில் கர்த்தர் காலதாமதம் செய்யவில்லை. ஆனால் அவர், உங்களைக்குறித்து பொறுமையாய் இருக்கிறார். ஏனெனில், யாரும் அழிந்துபோவதை அவர் விரும்பவில்லை. எல்லோரும் மனந்திரும்புதலை அடையவேண்டும் என்பதையே விரும்புகிறார்.
பத்துக் கன்னிகைகளின் உவமை
"அந்நாளிலே பரலோக அரசு, பத்து கன்னிகைகள் விளக்குகளை எடுத்துக்கொண்டு மணமகனைச் சந்திக்கப் போனதற்கு ஒப்பாயிருக்கும். அவர்களில் ஐந்துபேர் புத்தியில்லாத கன்னிகைகளாகவும் ஐந்துபேர் புத்தியுள்ள கன்னிகைகளாகவும் இருந்தார்கள். அந்த புத்தியில்லாத கன்னிகைகள் அவர்களுடைய விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. ஆனால் புத்தியுள்ள கன்னிகைகளோ தங்கள் விளக்குகளுடன் எண்ணெயையும் பாத்திரங்களில் எடுத்துச் சென்றார்கள். மணமகன் வருவதற்கு நீண்ட நேரமானபடியால், அவர்கள் எல்லோரும் அயர்ந்து தூங்கிவிட்டார்கள்.
"நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகிறார்! அவரை சந்திக்கப் புறப்படுங்கள் புறப்படுங்கள்’ என்ற சத்தம் கேட்டது.
"அப்பொழுது எல்லா கன்னிகைகளும் விழித்தெழுந்து, அவரவருடைய விளக்குகளை ஆயத்தம் செய்தார்கள். புத்தியில்லாத கன்னிகைகளோ புத்தியுள்ள கன்னிகைகளிடம், ‘உங்கள் எண்ணெயில் கொஞ்சம் எங்களுக்குத் தாருங்கள்; எங்கள் விளக்குகள் அணைந்து போகின்றன’ என்றார்கள்.
"அதற்கு புத்தியுள்ள கன்னிகைகள், ‘இல்லை, எங்களிடம் இருக்கும் எண்ணெய் உங்களுக்கும் எங்களுக்கும் போதாமல் போகலாம். எனவே நீங்கள் போய் எண்ணெய் விற்பவர்களிடம், உங்களுக்காக கொஞ்சம் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றார்கள்.
"புத்தியில்லாத கன்னிகைகள் எண்ணெய் வாங்குவதற்காகப் போகும்போதே மணமகன் வந்துவிட்டார். ஆயத்தமாக இருந்த கன்னிகைகள் திருமண விருந்தில் பங்குகொள்ள, அவருடன் உள்ளே சென்றார்கள். கதவோ அடைக்கப்பட்டது.
"பின்பு மற்றக் கன்னிகைகளும் வந்து, ‘ஆண்டவரே, ஆண்டவரே எங்களுக்குக் கதவைத் திறந்தருளும்!’ என்றார்கள்.
"ஆனால் அவரோ, ‘நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், உங்களை எனக்குத் தெரியாது’ எனப் பதிலளித்தார்.
"எனவே, விழிப்பாயிருங்கள்; ஏனெனில் மானிடமகனாகிய நான் திரும்பிவரும் நாளையும் வேளையையும் நீங்கள் அறியமாட்டீர்கள்" என்றார்.