Mentira
A mentira é condenada pela Bíblia como pecado grave. Deus é verdade, e quem mente se alinha com o pai da mentira. O cristão é chamado a falar a verdade em amor.
Deus odeia a mentira
Os lábios mentirosos são abominação para o Senhor. A Bíblia adverte que todo mentiroso terá parte no lago de fogo.
பொய்பேசும் உதடுகளை யெகோவா அருவருக்கிறார்,
ஆனால் உண்மையானவர்களில் அவர் மகிழ்வார்.
ஆனால் கோழைகள், விசுவாசம் இல்லாதவர்கள், சீர்கெட்டவர்கள், கொலைகாரர், முறைகேடான பாலுறவில் ஈடுபடுவோர், மந்திரவித்தைகளில் ஈடுபடுவோர், சிலைகளை வணங்குவோர், சகல பொய்யர் ஆகியோரின் இடம், கந்தகம் எரிகின்ற நெருப்புக் கடலே. இதுவே இரண்டாவது மரணம்."
யெகோவா வெறுக்கிற ஆறு காரியங்கள் உண்டு,
இல்லை, ஏழு காரியங்கள் அவருக்கு அருவருப்பானது:
கர்வமுள்ள கண்கள்,
பொய்பேசும் நாவு,
குற்றமற்ற இரத்தத்தைச் சிந்தும் கைகள்,
கொடுமையான சூழ்ச்சிகளைத் திட்டமிடும் இருதயம்,
தீமைசெய்ய விரையும் கால்கள்,
பொய்ச்சாட்சி,
சகோதரர்களுக்குள்ளே பிரிவினையைத் தூண்டிவிடும் நபர்.
நீங்கள் உங்கள் பழைய மனித சுபாவத்தையும், அதன் செய்கைகளையும் உங்களைவிட்டு விலக்கியிருக்கிறபடியால், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்.
Falar a verdade
Despojai-vos da mentira e falai a verdade cada um com o próximo. Cristo é a verdade, e nos chama a ser testemunhas fiéis.
ஆகையால் நீங்கள் ஒவ்வொருவரும், உங்களிடமிருந்து பொய் சொல்வதை அகற்றிவிடுங்கள். நாம் எல்லோரும் ஒரே உடலின் அங்கத்தினர்களாய் இருப்பதனால், நாம் ஒவ்வொருவரும் நமது அயலவருடன் உண்மையையே பேசவேண்டும்.
அதற்கு இயேசு, "வழியும், சத்தியமும், ஜீவனும் நானே. என் மூலமாய் அன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரமுடியாது.
நீங்கள் உங்கள் தகப்பனான சாத்தானுக்கு உரியவர்கள். உங்கள் தகப்பனின் ஆசைகளைச் செய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள். அவன் தொடக்கத்திலிருந்தே கொலைகாரனாய் இருக்கிறான். அவனிடம் சத்தியமில்லை. அதனால் அவன் சத்தியத்தில் நிலைத்திருப்பதில்லை. அவன் பொய் பேசும்போது தன் சொந்த மொழியையே பேசுகிறான். ஏனெனில் அவன் ஒரு பொய்யன், பொய்களின் தகப்பன்.
பொய்ச்சாட்சி சொல்பவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்கள்;
பொய்யைத் தாராளமாய்ப் பேசுபவரும் தப்பமுடியாது.
வஞ்சனை செய்யும் யாரும்
என் வீட்டில் வாழமாட்டார்கள்;
பொய்ப் பேசுபவர் யாரும்
என் சமுகத்தில் நிற்கவுமாட்டார்கள்.
Consequências da falsidade
A mentira destrói confiança e relacionamentos. As Escrituras alertam sobre os frutos amargos do engano e da falsidade.
பொய் சொல்லி சம்பாதிக்கும் செல்வம்,
பறந்து செல்லும் நீராவியாயும் மரணக் கண்ணியாயும் இருக்கும்.
உண்மைபேசும் உதடுகள் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்,
ஆனால் பொய்பேசும் நாவு சொற்ப நேரமே நிலைக்கும்.
பொய்பேசும் நாவு தான் புண்படுத்தியவர்களையே வெறுக்கிறது;
முகஸ்துதி பேசும் வாய் அழிவைக் கொண்டுவரும்.
பொய் சொல்கிறவர்களை நீர் அழிக்கிறீர்;
இரத்த வெறியரையும் வஞ்சகமுள்ள மனிதரையும்
யெகோவா அருவருக்கிறார்.
" ‘களவு செய்யவேண்டாம்.
" ‘பொய் சொல்லவேண்டாம்.
" ‘ஒருவரையொருவர் ஏமாற்றவேண்டாம்.