அன்னாளின் ஜெபம்
1 அப்பொழுது அன்னாள் ஜெபம்செய்து:
"என்னுடைய இருதயம் யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாக இருக்கிறது;
என்னுடைய பெலன்2:1 என் கொம்பு யெகோவாவுக்குள் உயர்ந்திருக்கிறது;
என்னுடைய எதிரியின்மேல் என்னுடைய வாய் தைரியமாகப் பேசும்;
உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்.
2 யெகோவாவைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை;
உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை;
எங்களுடைய தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை.
3 இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்;
அகந்தையான பேச்சு உங்களுடைய வாயிலிருந்து வெளியே வரவேண்டாம்;
யெகோவா ஞானமுள்ள தேவன்;
அவர் செயல்கள் யதார்த்தமல்லவா?
4 பலவான்களினுடைய வில் முறிந்தது;
தள்ளாடினவர்களோ பெலத்தினால் வலிமையடைந்தனர்.
5 திருப்தியாக இருந்தவர்கள் அப்பத்திற்காக கூலிவேலை செய்கிறார்கள்;
பசியாக இருந்தவர்களோ இனிப் பசியாக இருக்கமாட்டார்கள்;
மலடியாயிருந்தவள் ஏழு பிள்ளைகளை பெற்றாள்;
அநேகம் பிள்ளைகளைப் பெற்றவளோ இளைத்துப்போனாள்.
6 யெகோவா கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாக இருக்கிறார்;
அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும்செய்கிறவர்.
7 யெகோவா தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையச்செய்கிறவருமாக இருக்கிறார்;
அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர்.
8 அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து,
எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்;
அவர்களைப் பிரபுக்களோடு உட்காரவும்,
மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் செய்கிறார்;
பூமியின் அஸ்திபாரங்கள் யெகோவாவுடையவைகள்;
அவரே அவைகளின்மேல் உலகத்தை வைத்தார்.
9 அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்;
துன்மார்க்கர்கள் இருளிலே மெளனமாவார்கள்;
பெலத்தினால் ஒருவனும் வெற்றிபெறுவதில்லை.
10 யெகோவாவோடு வாதாடுகிறவர்கள் நொறுக்கப்படுவார்கள்;
வானத்திலிருந்து அவர்கள்மேல் முழக்கமிடுவார்;
யெகோவா பூமியின் கடைசிவரை நியாயந்தீர்த்து,
தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து,
தாம் அபிஷேகம் செய்தவரின் பெலனை உயரச்செய்வார்" என்று துதித்தாள்.