தேவனை மகிமைப்படுத்துதல்
1 இவைகளுக்குப் பின்பு, பரலோகத்தில் திரளான மக்கள்கூட்டம் ஆரவாரத்தோடு சத்தமிடுகிறதைக் கேட்டேன். அவர்கள்:
"அல்லேலூயா, இரட்சிப்பும் மகிமையும்
கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது;
அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.
2 தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து,
தம்முடைய ஊழியக்காரர்களின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே" என்றார்கள். 3 மறுபடியும் அவர்கள்:
"அல்லேலூயா" என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள்.