16 இவர்கள் இனிப் பசியடைவதும் இல்லை,
இனித் தாகமடைவதும் இல்லை; வெயிலோ,
வெப்பமோ இவர்கள்மேல் படுவதும் இல்லை.
17 சிங்காசனத்தின் நடுவில் இருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து,
இவர்களை ஜீவத்தண்ணீர் உள்ள ஊற்றுகளுக்கு நடத்திக்கொண்டு போவார்;
தேவனே இவர்களுடைய கண்ணீர் எல்லாவற்றையும் துடைப்பார்" என்றான்.