பேதுருவின் பிரசங்கம்
14 அப்பொழுது பேதுரு பதினொரு சீடர்களோடு நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாக: யூதர்களே, எருசலேமில் வசிக்கின்ற மக்களே, நீங்களெல்லோரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளைக் கேளுங்கள். 15 நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் மது அருந்தியவர்கள் அல்ல, பொழுதுவிடிந்து ஒன்பது மணியாக இருக்கிறதே. 16 தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நிறைவேறுகிறது.
17 கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும்
என் ஆவியைப் பொழிவேன்,
அப்பொழுது உங்களுடைய குமாரர்களும்
உங்களுடைய குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்;
உங்களுடைய வாலிபர்கள் தரிசனங்களைக் காண்பார்கள்;
உங்களுடைய மூப்பர்கள் கனவுகளைக் காண்பார்கள்;