17 கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும்
என் ஆவியைப் பொழிவேன்,
அப்பொழுது உங்களுடைய குமாரர்களும்
உங்களுடைய குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்;
உங்களுடைய வாலிபர்கள் தரிசனங்களைக் காண்பார்கள்;
உங்களுடைய மூப்பர்கள் கனவுகளைக் காண்பார்கள்;
18 என்னுடைய ஊழியக்காரர்கள்மேலும்,
என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்த நாட்களிலே என் ஆவியைப் பொழிவேன்,
அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்.
19 அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும்,
கீழே பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன்.
20 கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வரும்முன்னே சூரியன் இருளாகவும்,
சந்திரன் இரத்தமாகவும் மாறும்.
21 அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ
அவன் இரட்சிக்கப்படுவான்’ என்று தேவன் உரைத்திருக்கிறார்.