34 யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்.
அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
35 "இறைவனே, எங்கள் இரட்சகரே, எங்களைக் காப்பாற்றும்;
பிற நாடுகளிடமிருந்து எங்களை விடுவித்து சேர்த்துக்கொள்ளும்.
அப்பொழுது நாங்கள் உமது பரிசுத்த பெயருக்கு நன்றி செலுத்தி,
உம்மைத் துதிப்பதில் மேன்மைபாராட்டுவோம்" என்று சொல்லுங்கள்.
36 இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு
நித்தியத்திலிருந்து நித்தியம் வரைக்கும் துதி உண்டாகட்டும்.
அப்பொழுது எல்லா மக்களும், "ஆமென், யெகோவாவுக்கு துதி உண்டாவதாக" என்று சொன்னார்கள்.