எழுதுவதற்கான காரணம்
12 அன்பான பிள்ளைகளே, அவருடைய பெயரின் நிமித்தம்
உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு இருக்கிறபடியால்,
நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
13 தந்தையரே, தொடக்கத்திலிருந்தே இருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறபடியால்,
நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
இளைஞரே,
தீயவனை நீங்கள் மேற்கொண்டிருக்கிறபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
14 அன்பான பிள்ளைகளே,
நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
தந்தையரே, தொடக்கத்திலிருந்தே இருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறபடியால்,
நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
இளைஞரே, நீங்கள் பலம் உள்ளவர்களாகவும்,
இறைவனுடைய வார்த்தை உங்களுக்குள் குடியிருப்பதாலும்,
நீங்கள் தீயவனை மேற்கொண்டிருப்பதாலும்,
நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
உலகத்தை நேசிக்க வேண்டாம்
15 உலகத்திலும் உலகத்திலுள்ள எவற்றிலும் அன்புகொள்ள வேண்டாம். யாராவது உலகத்தில் அன்புகொள்வானாகில், பிதாவின் அன்பு அவனில் இல்லை.