41 எலியா ஆகாபிடம், "நீர் திரும்பிப்போய் சாப்பிட்டு, குடியும். மழை இரைச்சல் கேட்கிறது" என்றான். 42 அப்படியே ஆகாப் உண்ணவும் குடிக்கவும் போனான். ஆனால் எலியா கர்மேலின் உச்சிக்கு ஏறி தன் முழங்கால்களுக்கிடையில் தன் முகத்தை வைத்துக்கொண்டு நிலம் வரை குனிந்தான்.
43 அவன் தன் வேலையாளிடம், "நீ போய் கடல் பக்கமாய் பார்" என்றான். அவன் போய்ப் பார்த்தான்.
"அங்கு ஒன்றும் இல்லை" என்று வந்து சொன்னான்.
அதற்கு எலியா, "திரும்பப் போ" என்று ஏழுமுறை அவ்வாறே சொன்னான்.
44 ஏழாம்முறை அந்த வேலையாள், "ஒரு மனிதனின் கை அளவுள்ள ஒரு சிறிய மேகம் கடலிலிருந்து எழும்புகிறது" என்று சொன்னான்.
அப்பொழுது எலியா அவனைப் பார்த்து, "ஆகாபிடம் போய், ‘மழை உன்னை தடைசெய்யுமுன் தேரைப் பூட்டிக்கொண்டு கீழே போய்விடு’ என்று சொல்" என்றான்.
45 அதற்கிடையில் வானம் மேகங்களினால் கருத்து, காற்று எழும்பி, பெருமழை வேகமாகப் பெய்தது. ஆகாப் தேரில் ஏறி யெஸ்ரயேலுக்கு விரைந்து போனான்.