15 அதற்கு அன்னாள், "இல்லை ஐயா, நானோ கவலை நிறைந்த மனதையுடைய பெண். நான் திராட்சை இரசமோ, மதுவோ குடிக்கவில்லை. நான் யெகோவாவுக்குமுன் என் துயரத்தைச் சொல்லி அழுகிறேன். 16 உம்முடைய அடியாளை கெட்ட நடத்தையுள்ள பெண்1:16 கெட்ட நடத்தையுள்ள பெண் என்பது எபிரெயத்தில் பேலியாளின் மகள் தீயவள் என்று அர்த்தம் 2 கொரி. 6:15. என எண்ணவேண்டாம். நான் மிகுந்த துயரத்தினாலும் கவலையினாலும் மன்றாடுகிறேன்" என்றாள்.