5 மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டன,
அழிவின் அலைகள் என்னை அமிழ்த்திவிட்டன.
6 பிரேதக் குழியின் கயிறுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன;
மரணத்தின் கண்ணிகள் என்னை எதிர்த்து வந்தன.
7 "என் துயரத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்.
என் இறைவனை நோக்கிக் கூப்பிட்டேன்.
அவர் தமது ஆலயத்திலிருந்து என் குரலைக் கேட்டார்.
என் அழுகுரல் அவர் செவிகளில் எட்டியது.