9 அந்தப் பெரிய இராட்சதப் பாம்பு கீழே தள்ளப்பட்டது. இதுவே பிசாசு என்றும், சாத்தான் என்றும் அழைக்கப்பட்ட ஆதியிலே இருந்த பாம்பு. முழு உலகத்தையும் ஏமாற்றுகிறவன் இவனே. அவனும், அவனுடைய தூதர்களும் பூமியிலே விழும்படி தள்ளப்பட்டார்கள்.
10 அப்பொழுது பரலோகத்திலே உரத்த சத்தமான ஒரு குரல் இவ்வாறு சொல்வதை நான் கேட்டேன்:
"இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது இறைவனுடைய அரசும் வந்துவிட்டன.
அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் வந்துவிட்டது.
ஏனெனில் நம்முடைய சகோதரர்களைக் குற்றம் சாட்டுகிறவன்
கீழே வீசித் தள்ளப்பட்டான்.
இவனே நம்முடைய இறைவனுக்கு முன்பாக,
இரவும் பகலும் அவர்களைக் குற்றம் சாட்டுகிறவன்.