ஆட்டுக்குட்டியானவர்
1 பின்பு அரியணையில் அமர்ந்திருப்பவரின் வலதுகையில் ஒரு புத்தகச்சுருள் இருப்பதை நான் கண்டேன். அது இரண்டு பக்கங்களிலும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்டிருந்தது. 2 அப்பொழுது ஒரு வல்லமையுள்ள தூதன், "இந்த முத்திரைகளை உடைத்து, புத்தகச்சுருளைத் திறப்பதற்குத் தகுதியுள்ளவன் யார்?" என்று உரத்த குரலில் சொல்லிக்கொள்வதை நான் கண்டேன்.