17 " ‘இறைவன் சொல்லியபடி,
கடைசி நாட்களில், நான் எல்லா மக்கள்மேலும் என் ஆவியானவரைப் பொழிவேன்.
உங்கள் மகன்களும் மகள்களும் இறைவாக்கு உரைப்பார்கள்,
உங்கள் இளைஞர் தரிசனங்களைக் காண்பார்கள்,
உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள்.
18 மேலும் அந்நாட்களில் நான், எனது ஊழியக்காரர்கள்மேலும் ஊழியக்காரிகள்மேலும்,
என் ஆவியைப் பொழிவேன்.
அப்பொழுது அவர்கள் இறைவாக்கு உரைப்பார்கள்.
19 உயரே வானத்தில் நான் அதிசயங்களைக் காண்பிப்பேன்,
கீழே பூமியில் அடையாளங்களாக
இரத்தத்தையும், நெருப்பையும், புகை மண்டலங்களையும் காண்பிப்பேன்.
20 பெரிதும் மகிமையானதுமான கர்த்தரின் நாள் வருமுன்பே,
சூரியன் இருண்டுபோகும்;
சந்திரன் இரத்தமாக மாறும்.
21 கர்த்தரின் பெயரைச் சொல்லி கூப்பிடுகிற
யாவரும் இரட்சிக்கப்படுவார்கள்.’2:21 யோயே. 2:28-32