32 அந்த அதிகாரி வாசித்துக்கொண்டிருந்த வேதவசனப் பகுதியில்:
"அவர் கொல்லப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் ஆட்டைப்போல் இருந்தார்.
மயிர்க்கத்தரிப்பவனுக்கு முன்பாக மவுனமாயிருக்கும் ஆட்டுக்குட்டியைப்போல்,
அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.
33 அவர் அவமதிக்கப்படுகையில், அவருக்கு நீதி கிடைக்கவில்லை.
அவருடைய சந்ததியைக்குறித்து யாரால் என்ன சொல்லமுடியும்?
அவருடைய உயிர் பூமியிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டதே"8:33 ஏசா. 53:7,8 (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்)
என்றிருந்தது.
34 அந்த அதிகாரி பிலிப்புவிடம், "இறைவாக்கினர் யாரைக்குறித்து இதைச் சொல்கிறார்? தம்மைக்குறித்தா, அல்லது வேறு ஒருவரைக்குறித்தா?" தயவுசெய்து எனக்குச் சொல்லும் என்றான். 35 அப்பொழுது பிலிப்பு, அதே வேதவசனப் பகுதியைக்குறித்துப் பேசத்தொடங்கி, இயேசுவைப்பற்றிய நற்செய்தியை அவனுக்குச் சொன்னான்.