9 நான் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கையில்,
அந்த இடத்தில் அரியணைகள் அமைக்கப்பட்டன.
அதன் நடுவில் பூர்வீகத்திலுள்ளவர் அமர்ந்திருந்தார்.
அவரது உடை உறைந்த பனியைப்போல் வெண்மையாயிருந்தது.
அவருடைய தலைமயிர் தூய்மையான பஞ்சைப்போல் வெண்மையாய் இருந்தது.
அவரது அரியணை கொழுந்துவிட்டெரிகிற நெருப்பினால் சுடர் விட்டுக்கொண்டிருந்தது.
அதன் சக்கரங்கள் கொழுந்து விட்டெரிந்தன.
10 அவர் முன்னிலையிலிருந்து
நெருப்பு ஆறு ஒன்று எழும்பி ஓடிக்கொண்டிருந்தது.
ஆயிரம் ஆயிரமானவர்கள் அவருக்குப் பணிபுரிந்தார்கள்.
கோடிக்கணக்கானோர் அவர்முன் நின்றார்கள்.
நீதிமன்றம் கூட்டப்பட்டது.
புத்தகங்கள் திறக்கப்பட்டன.