16 இஸ்ரயேலர் அந்நிய தெய்வங்களைப் பின்பற்றி யெகோவாவுக்கு எரிச்சல்மூட்டி,
தங்கள் அருவருப்பான விக்கிரகங்களால் அவருக்குக் கோபம் உண்டாக்கினார்கள்.
17 அவர்கள் பேய்களுக்குப் பலி செலுத்தினார்கள். அவை இறைவன் அல்ல.
அவர்கள் முன்பு அறிந்திராத தெய்வங்களே அவை.
சமீபத்தில் தோன்றியதும்,
உங்கள் முற்பிதாக்கள் பயப்படாததுமான தெய்வங்கள்.
18 உங்களை உருவாக்கிய கற்பாறையைக் கைவிட்டு விட்டீர்கள்.
உங்களைப் பெற்றெடுத்த இறைவனையும் மறந்துபோனீர்கள்.