8 தனிமையாய் இருக்கும் ஒரு மனிதன் இருந்தான்.
அவனுக்கு மகனோ, சகோதரனோ இல்லை.
அப்படியிருந்தும் அவனுடைய கடும் உழைப்பிற்கோ முடிவே இருக்கவில்லை.
ஆனாலும் அவன் கண்கள் அவனுடைய செல்வத்தில் திருப்தியடையவுமில்லை.
அவன், "நான் யாருக்காக கஷ்டப்பட்டு உழைக்கிறேன்;
ஏன் நான் என் வாழ்வை சந்தோஷமாய் அனுபவியாதிருக்கிறேன்" என்று கேட்டான்.
இதுவும் அர்த்தமற்றதும்,
அவலத்துக்குரிய ஒரு நிலையாயும் இருக்கிறது.