17 அவர் ஆதாமிடம் சொன்னதாவது: " ‘நீ சாப்பிடவேண்டாம்,’ என நான் உனக்குக் கட்டளையிட்ட மரத்திலிருந்து நீ உன் மனைவியின் சொல்லைக் கேட்டுச் சாப்பிட்டபடியினால்,
"உன் நிமித்தம் பூமி சபிக்கப்பட்டிருக்கும்;
உன் வாழ்நாளெல்லாம்
நீ வருந்தி உழைத்தே பூமியின் பலனைச் சாப்பிடுவாய்.
18 பூமி முற்களையும் முற்புதர்களையும் உனக்கு விளைவிக்கும்,
வயலின் பயிர்களையே நீ சாப்பிடுவாய்.
19 நீ புழுதியிலிருந்து எடுக்கப்பட்டபடியால்,
நீ புழுதிக்குத் திரும்பும்வரை,
நெற்றி வியர்வை சிந்தியே
உன் உணவைச் சாப்பிடுவாய்;
நீ புழுதியிலிருந்து உண்டாக்கப்பட்டதால்
புழுதிக்கே திரும்புவாய்."