35 ஆகையால் உங்களுக்கிருக்கும் அந்த மனவுறுதியை நீங்கள் இழந்துவிடாதீர்கள். அது உங்களுக்கு ஒரு பெரிதான வெகுமதியைக் கொண்டுவரும்.
36 நீங்கள் விடாமுயற்சியுடையவர்களாய் இருக்கவேண்டும். அப்பொழுதே நீங்கள் இறைவனுடைய சித்தத்தைச் செய்து முடித்தபின், அவர் வாக்குக்கொடுத்ததைப் பெற்றுக்கொள்வீர்கள். 37 ஏனெனில்,
"வருகிறவர் கொஞ்சக் காலத்திலே,
வந்துவிடுவார்.
அவர் தாமதிக்கமாட்டார்.10:37 ஏசா. 26:20; ஆப. 2:3
38 ஆனால்,
"எனது நீதிமான்கள்10:38 சில கையெழுத்துப் பிரதிகளில் எனது நீதிமான்கள் என்பது நீதிமான்கள் என்றுள்ளது விசுவாசத்தினாலே பிழைப்பார்கள்.
அவர்களில் ஒருவனாவது பின்வாங்கிப்போனால்,
நான் அவனில் பிரியமாயிருக்கமாட்டேன்"10:38 ஆப. 2:4 (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்)
என்ற உற்சாகமூட்டும் வேதவசனங்களை நாம் அறிவோம்.
39 நாமோ விசுவாசத்திலிருந்து பின்வாங்கி, அழிந்துபோகிறவர்களோடு அல்ல. விசுவாசித்து, இரட்சிக்கப்படுகிறவர்களோடே சேர்ந்தவர்களாயிருக்கிறோம்.