5 பண ஆசையிலிருந்து விலகி, உங்களிடம் இருப்பதைக்கொண்டு மனத்திருப்தியுடன் வாழுங்கள். ஏனெனில் இறைவன்,
"நான் உன்னைவிட்டு ஒருபோதும் விலகமாட்டேன்;
நான் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்"13:5 உபா. 31:6
என்று சொல்லியிருக்கிறாரே.
6 எனவே நாமும் மனத்தைரியத்துடன்,
"கர்த்தர் எனக்கு உதவியாளர்; நான் பயப்படமாட்டேன்.
மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?"13:6 சங். 118:6,7
என்று சொல்வோம்.