16 அப்பொழுது இயேசு அவளிடம், "மரியாளே!" என்றார்.
அவள் அவர் நின்ற பக்கமாய்த் திரும்பி, "ரபூனி!" என்று எபிரெய மொழியில் சத்தமாய் சொன்னாள். ரபூனி என்றால், "போதகரே" என்று அர்த்தம்.
17 அப்பொழுது இயேசு அவளிடம், "நீ என்னைப் பற்றிக்கொள்ளாதே. ஏனெனில் நான் இன்னும் என் பிதாவினிடத்திற்குத் திரும்பிப் போகவில்லை. நீயோ என் சகோதரரிடம் போய் அவர்களிடம், ‘நான் என் பிதாவினிடத்திற்கும், உங்கள் பிதாவினிடத்திற்கும், என் இறைவனிடத்திற்கும், உங்கள் இறைவனிடத்திற்கும் திரும்பிப் போகிறேன்’ என்று சொல்" என்றார்.
18 மகதலேனா மரியாள் சீடர்களிடம் போய், "நான் கர்த்தரைக் கண்டேன்!" என்று அறிவித்தாள், அவள், கர்த்தர் தனக்குக் கூறிய காரியங்களையும் அவர்களுக்குச் சொன்னாள்.