தோமாவுக்குக் காட்சியளித்தல்
24 இயேசு அங்கே வந்தபோது, பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான திதிமு என்றழைக்கப்பட்ட தோமா சீடர்களுடன் இருக்கவில்லை. 25 எனவே மற்றச் சீடர்கள் அவனிடம், "நாங்கள் கர்த்தரைக் கண்டோம்!" என்றார்கள்.
ஆனால், தோமா அவர்களிடம், "அவருடைய கைகளில் ஆணிகள் அடிக்கப்பட்டக் காயத்தை நான் கண்டு, எனது விரலை ஆணி பாய்ந்த காயத்திலும், அவருடைய விலாவிலும் வைத்து பார்த்தாலொழிய நான் அதை விசுவாசிக்கமாட்டேன்" என்றான்.
26 இது நடந்து எட்டு நாட்களுக்குப்பின் இயேசுவின் சீடர்கள் அந்த வீட்டில் மீண்டும் கூடியிருந்தார்கள். தோமாவும் அவர்களுடனே இருந்தான். கதவுகள் பூட்டப்பட்டிருந்த போதுங்கூட, இயேசு வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்" என்றார். 27 பின்பு அவர் தோமாவிடம், "இங்கே உனது விரலைப் போட்டு எனது கைகளைப் பார். உனது கையை நீட்டி என் விலாவைத் தொட்டுப்பார். அவிசுவாசியாயிராமல், விசுவாசியாயிரு" என்றார்.
28 அப்பொழுது தோமா, "என் ஆண்டவரே, என் இறைவனே!" என்றான்.
29 அதற்கு இயேசு அவனிடம், "நீ என்னைக் கண்டதினால் விசுவாசிக்கிறாய்; என்னைக் காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்" என்றார்.