31 இதற்கிடையில் அவருடைய சீடர்கள், "போதகரே, சாப்பிடுங்கள்" என்று அவரைக் கேட்டுக்கொண்டார்கள்.
32 அதற்கு இயேசு அவர்களிடம், "நான் சாப்பிடுவதற்கு நீங்கள் அறியாத உணவு எனக்கு இருக்கிறது" என்றார்.
33 அப்பொழுது அவருடைய சீடர்கள், "யாராவது அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோ?" என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
34 இயேசு அவர்களிடம், "என்னை அனுப்பினவருடைய சித்தத்தைச் செய்து, அவருடைய வேலையை முடிப்பதே எனது உணவு.