66 அப்பொழுதிலிருந்து இயேசுவின் சீடர்களில் பலர் அவரைவிட்டுத் திரும்பிப் போய்விட்டார்கள். தொடர்ந்து அவர்கள் அவரைப் பின்பற்றவில்லை.
67 அப்பொழுது இயேசு பன்னிரண்டு பேரிடமும், "நீங்களும் போய்விட விரும்புகிறீர்களா?" என்று கேட்டார்.
68 சீமோன் பேதுரு அதற்குப் பதிலாக, "ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? நித்திய ஜீவ வார்த்தைகள் உம்மிடம் அல்லவா உண்டு. 69 நீர் இறைவனின் பரிசுத்தர் என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம்" என்றான்.