மரியாளின் பாடல்
46 அப்பொழுது மரியாள் சொன்னதாவது:
"என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது,
47 என் ஆவி என் இரட்சகராகிய இறைவனில் பெருமகிழ்ச்சியடைகிறது.
48 ஏனெனில், அவர் தமது
அடிமையின் தாழ்மை நிலையைத் தயவுடன் பார்த்தார்.
இப்பொழுதிலிருந்து எல்லாத் தலைமுறையினரும்
என்னை ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று அழைப்பார்கள்;
49 வல்லமையுள்ளவர் எனக்கு அரும்பெரும் காரியங்களைச் செய்தார்;
பரிசுத்தர் என்பது அவருடைய பெயர்.