இயேசு புயலை அடக்குதல்
22 ஒரு நாள் இயேசு தம்முடைய சீடர்களிடம், "ஏரியின் மறுகரைக்குப் போவோம் வாருங்கள்" என்றார். அப்படியே அவர்கள், ஒரு படகில் ஏறிப் புறப்பட்டார்கள். 23 அவர்கள் போய்க்கொண்டிருக்கையில், இயேசு தூங்கிக்கொண்டிருந்தார். அப்பொழுது புயல்காற்று ஏரியின்மேல் வீசியது. படகில் தண்ணீர் நிரம்பத் தொடங்கியதால், அவர்கள் பெரிய ஆபத்துக்கு உள்ளானார்கள்.
24 அப்போது சீடர்கள் இயேசுவிடம் வந்து, அவரை எழுப்பி, "ஆண்டவரே, ஆண்டவரே, நாங்கள் தண்ணீரில் மூழ்கப்போகிறோம்!" என்றார்கள்.
அவர் எழுந்து காற்றையும், கொந்தளிக்கும் தண்ணீரையும் கடிந்துகொண்டார்; புயல் தணிந்து, எல்லாம் அமைதியாயிற்று. 25 அப்பொழுது அவர் தமது சீடர்களிடம், "உங்கள் விசுவாசம் எங்கே?" என்று கேட்டார்.
அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து, "இவர் யாரோ? காற்றுக்கும், கடலுக்கும் கட்டளையிடுகிறார். அவையும் அவருக்குக் கீழ்ப்படிகின்றன" என்று பயத்துடனும், வியப்புடனும் பேசிக்கொண்டார்கள்.
பிசாசு பிடித்தவன் சுகமடைதல்
26 அவர்கள் கலிலேயா கடலின் மறுகரையிலுள்ள கதரேனருடைய8:26 சில கையெழுத்துப் பிரதிகளில் கதரேனருடைய என்றும்; வசனம் 37 மற்ற கையெழுத்துப் பிரதிகளில் கெரசேனர் என்றுமுள்ளது. நாட்டிற்குப் படகில் சென்றார்கள்.