39 இயேசு விழித்தெழுந்து, காற்றைக் கடிந்துகொண்டார்; அலைகளிடம், "அமைதியாயிரு! இரையாதே" என்றார். அப்பொழுது காற்று அடங்கி, மிகுந்த அமைதி உண்டாயிற்று.
40 இயேசு தமது சீடர்களிடம், "நீங்கள் ஏன் இவ்வளவாய் பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் விசுவாசம் இல்லையா?" என்றார்.
41 அவர்கள் பயமடைந்து ஒருவரோடொருவர், "இவர் யார்? காற்றும், அலைகளுங்கூட இவருக்குக் கீழ்ப்படிகிறதே?" என்று பேசிக்கொண்டார்கள்.