22 ஏரோதியாளின் மகள் உள்ளே வந்து நடனமாடினாள். அவள் ஏரோதுக்கும் அவனுடைய விருந்தினர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தாள்.
எனவே அரசன் அந்தச் சிறுமியிடம், "உனக்கு விருப்பமான எதையும் கேள். அதை நான் உனக்குத் தருவேன். 23 நீ எதைக் கேட்டாலும், அது எனது அரசில் பாதியாக இருந்தாலும், நான் தருவேன்" என்று ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான்.
24 அந்தச் சிறுமி வெளியே போய், தனது தாயிடம் இதைச் சொல்லி, "நான் எதைக் கேட்கவேண்டும்?" என்று கேட்டாள்.
அதற்கு அவள், "யோவான் ஸ்நானகனின் தலையைக் கேள்" என்றாள்.
25 உடனே அந்தச் சிறுமி அரசனிடம் ஓடி, "இப்பொழுதே யோவான் ஸ்நானகனின் தலையை ஒரு தட்டில் வைத்து, கொடுங்கள்" என்று கேட்டாள்.
26 அரசனோ மிகவும் துக்கமடைந்தான். ஆனால் தான் கொடுத்த ஆணையின் நிமித்தமும், தனது விருந்தினர்களின் நிமித்தமும் அதை அவளுக்கு அவன் மறுக்க விரும்பவில்லை. 27 எனவே அரசன் உடனே, யோவானின் தலையைக் கொண்டுவரும்படி உத்தரவிட்டு ஒரு காவற்காரனை அனுப்பினான். அவன் போய் சிறையிலிருந்த யோவானின் தலையை வெட்டினான். 28 அவனுடைய தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டுவந்தான். அவன் அதை அந்தச் சிறுமிக்குக் கொடுக்க, அவள் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள்.