9 மேலும், அவர் அவர்களிடம் சொன்னதாவது: "நீங்கள் உங்கள் பாரம்பரிய முறைகளைக் கைக்கொள்வதற்காக7:9 சில கையெழுத்துப் பிரதிகளில் நிலைநாட்ட என்றுள்ளது., இறைவனின் கட்டளைகளைப் புறக்கணிப்பதில் மிகவும் புத்திசாலிகள். 10 ஏனெனில் மோசே, ‘உனது தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்,7:10 யாத். 20:12; உபா. 5:16 தனது தகப்பனையோ தாயையோ சபித்தால் அவன் கொல்லப்படவேண்டும்’7:10 யாத். 21:17; லேவி. 20:9 என்றும் சொல்லியிருக்கிறார். 11 ஆனால் நீங்களோ, ஒருவன் தன் தாய் தகப்பனைப் பார்த்து, ‘என்னிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய உதவியை காணிக்கையாக7:11 மூல மொழியில் கொர்பான் என்றுள்ளது. இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டேன்’ என்று அவன் சொன்னால், அதுபோதும் என்கிறீர்கள். 12 அதற்குப் பின்பு தன் தகப்பனுக்கோ, தாய்க்கோ எந்த உதவியையும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை. 13 இவ்விதமாய், நீங்கள் கைக்கொண்டுவரும் பாரம்பரிய முறையினால், இறைவனுடைய வார்த்தையை செல்லாததாக்குகிறீர்கள். அத்துடன், நீங்கள் இவ்விதமான பல காரியங்களையும் செய்கிறீர்கள்" என்றார்.