இயேசுவின் தாயும் சகோதரரும்
46 இயேசு மக்கள் கூட்டத்தோடு இன்னும் பேசிக்கொண்டிருக்கையில், அவருடைய தாயும், சகோதரர்களும் அவருடன் பேச விரும்பி, வெளியே காத்துக்கொண்டிருந்தார்கள். 47 அப்பொழுது ஒருவன் இயேசுவிடம் வந்து, "உமது தாயும், உமது சகோதரர்களும் உம்முடன் பேச விரும்பி வெளியே நிற்கிறார்கள்" என்றான்.
48 இயேசு அவனிடம், "யார் எனது தாய்? யார் எனது சகோதரர்கள்?" என்று கேட்டார். 49 பின்பு அவர் தமது சீடரைச் சுட்டிக்காட்டி, "இவர்களே என் தாயும், என் சகோதரர்களுமாய் இருக்கிறார்கள். 50 எனது பரலோக பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவர்களே எனது சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறார்கள்" என்றார்.