29 அதற்கு இயேசு, "வா" என்றார்.
அப்பொழுது பேதுரு படகைவிட்டு வெளியே இறங்கி, தண்ணீரின்மேல் நடந்து இயேசுவை நோக்கி வந்தான். 30 ஆனால் அவன் காற்றைக் கண்டபோது பயமடைந்து மூழ்கத்தொடங்கி, "ஆண்டவரே என்னைக் காப்பாற்றும்!" என்று கதறினான்.
31 உடனே இயேசு தமது கையை நீட்டி பேதுருவைப் பிடித்தார். "அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய்?" என்றார்.