23 அப்பொழுது இயேசு தமது சீடர்களிடம், "நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு செல்வந்தன் பரலோக அரசிற்குள் செல்வது மிகக் கடினமானது. 24 மறுபடியும் நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு செல்வந்தன் இறைவனின் அரசிற்குள் செல்வதைப் பார்க்கிலும், ஒரு ஒட்டகம் ஊசியின் காதிற்குள் நுழைவது சுலபமாக இருக்கும்" என்றார்.
25 இதைச் சீடர்கள் கேட்டபோது, மிகவும் வியப்புற்று, "அப்படியானால் யார்தான் இரட்சிக்கப்பட முடியும்?" எனக் கேட்டார்கள்.
26 இயேசு அவர்களை நோக்கிப்பார்த்து, "மனிதனால் இது முடியாது. ஆனால் இறைவனால் எல்லாவற்றையும் செய்யமுடியும்" என்றார்.