ஆலயத்தில் இயேசு
12 இயேசு ஆலய முற்றத்திற்குச் சென்று, அங்கே பொருட்களை விற்கிறவர்களும், வாங்குகிறவர்களுமாகிய எல்லோரையும் வெளியே துரத்தினார். அவர் நாணயம் மாற்றுவோரின் மேஜைகளையும், புறா விற்கிறவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப் போட்டார். 13 இயேசு அவர்களிடம், "எனது வீடு ஜெபவீடு என்று அழைக்கப்படும் என எழுதப்பட்டிருக்கிறது21:13 ஏசா. 56:7. ஆனால் நீங்கள், அதைக் கள்வரின் குகையாக்குகிறீர்கள்"21:13 எரே. 7:11 என்றார்.