15 அவர் செய்த இந்த புதுமையான காரியங்களையும், சிறுபிள்ளைகள் ஆலய முற்றத்திற்குள் நின்று, "தாவீதின் மகனுக்கு ஓசன்னா" என்று ஆர்ப்பரிப்பதையும், தலைமை ஆசாரியரும் மற்றும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும் கண்டார்கள். அதனால் அவர்கள் கோபமடைந்தார்கள்.
16 அவர்கள் இயேசுவிடம், "இந்தப் பிள்ளைகள் சொல்வது கேட்கிறதா?" என்றார்கள்.
இயேசு அதற்கு பதிலாக, "ஆம்,
" ‘சிறுபிள்ளைகளின் உதடுகளிலிருந்தும் குழந்தைகளின்
உதடுகளிலிருந்தும் துதிகளை ஏற்படுத்தினீர்,’21:16 சங். 8:2 எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்.
என்று எழுதியிருப்பதை, நீங்கள் ஒருபோதும் வேதவசனங்களில் வாசிக்கவில்லையா?" என்று கேட்டார்.