20 அவ்வேளையில், பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் வருந்திக்கொண்டிருந்த ஒரு பெண், இயேசுவுக்குப் பின்னால் வந்து, அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டாள். 21 அவள், "நான் அவரது மேலுடையைத் தொட்டால் போதும். குணமடைவேன்" எனத் தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
22 இயேசு அவளை திரும்பிப்பார்த்து, "மகளே, தைரியமாயிரு; உனது விசுவாசம் உன்னை குணப்படுத்தியது" என்றார். அந்தப் பெண் அந்த நேரத்திலேயே குணமானாள்.