இயேசு பார்வையற்றோரையும் ஊமையனையும் குணமாக்குதல்
27 இயேசு அங்கிருந்து போகும்போது, இரண்டு பார்வையற்றோர் அவரைப் பின்தொடர்ந்து சென்று, "தாவீதின் மகனே! எங்கள்மேல் இரக்கமாயிரும்!" என்று சத்தமிட்டார்கள்.
28 அவர் வீட்டிற்குள் சென்றபோது, அந்த பார்வையற்றோர் அவரைப் பின்தொடர்ந்து அவரிடம் வந்தார்கள். இயேசு அவர்களிடம், "என்னால் இதைச் செய்யமுடியும் என நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?" எனக் கேட்டார்.
"ஆம் ஆண்டவரே!" என்று அவர்கள் பதிலளித்தார்கள்.
29 பின்பு இயேசு, அவர்களுடைய கண்களைத் தொட்டு, "உங்களுடைய விசுவாசத்தின்படியே உங்களுக்குச் செய்யப்படும்" என்றார். 30 உடனே அவர்களுக்கு பார்வை கிடைத்தது. இயேசு அவர்களிடம், "இதைப்பற்றி ஒருவரும் அறியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்" எனக் கடுமையாக எச்சரித்தார்.