33 அப்படியே அவர்கள் யெகோவாவினுடைய மலையை விட்டுப் புறப்பட்டு மூன்று நாட்கள் பயணம் செய்தார்கள். தங்கும் இடம் ஒன்றைக் கண்டுகொள்வதற்காக அந்த மூன்றுநாட்களும் யெகோவாவின் உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்கு முன்னால் சென்றது. 34 அவர்கள் முகாமைவிட்டுப் புறப்பட்டபோது, பகலில் யெகோவாவின் மேகம் அவர்களுக்கு மேலாக இருந்தது.
35 உடன்படிக்கைப்பெட்டி புறப்பட்டபோதெல்லாம் மோசே சொன்னது:
"யெகோவாவே, எழுந்தருளும்!
உமது பகைவர் சிதறடிக்கப்படுவார்களாக;
உமது எதிரிகள் உமக்கு முன்பாகப் பயந்து ஓடுவார்களாக."
36 உடன்படிக்கைப்பெட்டி தங்கும்போதெல்லாம் மோசே சொன்னது:
"யெகோவாவே,
எண்ணிலடங்கா பல்லாயிரக்கணக்கான இஸ்ரயேலரிடம் திரும்பி வாரும்."