6 ஏனெனில் யெகோவாவே ஞானத்தைத் தருபவர்;
அறிவும் விவேகமும் அவருடைய வாயிலிருந்தே வருகின்றன.
7 அவர் நீதிமான்களுக்கு வெற்றியைக் கொடுத்து,
குற்றமற்றவர்களாய் நடப்பவர்களுக்கு அவர் கேடயமாயிருந்து,
8 அவர் நியாயத்தின் வழியைக் காத்துக்கொள்கிறார்;
தமக்கு உண்மையாய் இருப்பவர்களின் வழியைப் பாதுகாக்கிறார்.