3 ஏனெனில் விபசாரியின் உதடுகள் தேனைச் சிந்தும்,
அவளுடைய பேச்சு எண்ணெயைவிட மிருதுவாயிருக்கும்;
4 ஆனால் முடிவோ, அவள் வேம்பைப்போல் கசப்பாயும்,
இருபக்கமும் கூர்மையுள்ள வாளைப்போலவும் இருப்பாள்.
5 அவளுடைய பாதங்கள் மரணத்திற்குச் செல்கின்றன;
அவள் காலடிகளோ நேரே பாதாளத்திற்கு வழிநடத்துகின்றன.
6 அவளோ வாழ்வின் வழியைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை,
அவளுடைய பாதைகள் கோணலானவை, அவள் அதை அறியாதிருக்கிறாள்.
7 ஆகவே என் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்;
நான் சொல்வதைவிட்டு விலகவேண்டாம்.
8 அவளுக்குத் தூரமான வழியில் நடங்கள்,
அவளுடைய வீட்டின் வாசலையும் மிதிக்கவேண்டாம்.
9 இல்லையென்றால், உங்களுடைய கனத்தை மற்றவர்களிடமும்
உங்களுடைய வாழ்நாட்களை கொடூரர்களிடமும் இழந்துவிடுவீர்கள்;