14 யெகோவாவின் பெரிய நாள் சமீபித்துள்ளது;
அது மிக சமீபமாய் இருந்து விரைவாய் வருகிறது.
கேளுங்கள்! யெகோவாவின் நாளில் ஏற்படும் அழுகை மிகவும் கசப்பாயிருக்கும்.
இராணுவவீரருங்கூட கூக்குரலிடுவார்கள்.
15 அந்த நாள் கடுங்கோபத்தின் நாள்,
துன்பமும் வேதனையும் நிறைந்த நாள்,
தொல்லையும் அழிவுமான நாள்,
அது இருளும் அந்தகாரமுமான நாள்.
மப்பும் மந்தாரமுமான நாள்.
16 அரணான நகரங்களுக்கு எதிராகவும்,
மூலைக் கோபுரங்களுக்கு எதிராகவும்
எக்காள சத்தமும் போர் முரசும் எழுப்பப்படும் நாள்.
17 மக்கள் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்ததால்,
நான் அவர்கள்மேல் துன்பத்தை வரப்பண்ணுவேன்;
அவர்கள் குருடரைப்போல் தட்டித் தடவி நடப்பார்கள்.
அவர்களுடைய இரத்தம் புழுதியில் ஊற்றப்படும்.
அவர்களுடைய குடல்கள் சாணத்தைப்போல் நிலத்தில் கொட்டப்படும்.
18 யெகோவாவினுடைய கடுங்கோபத்தின் நாளிலே,
அவர்களுடைய வெள்ளியோ தங்கமோ
அவர்களைக் காப்பாற்றமாட்டாது.
அவருடைய வைராக்கியத்தின் நெருப்பினால்,
முழு உலகமும் சுட்டெரிக்கப்படும்.
ஏனெனில் அவர் பூமியில் வாழும் யாவருக்கும்
திடீரென ஒரு முடிவைக் கொண்டுவருவார்.