Raiva
A raiva é uma emoção humana que a Bíblia trata com seriedade. Irar-se não é pecado em si, mas a ira descontrolada destrói relacionamentos e abre porta para o mal.
Controlar a ira
A Bíblia nos exorta a ser tardios para irar-se. A resposta branda desvia o furor, e o que se controla é mais forte que um guerreiro.
கேட்டலும் செயல்படுலும்
பிரியமானவர்களே, நீங்கள் கவனிக்கவேண்டியது என்னவென்றால்: செவிகொடுத்துக் கேட்பதில் நீங்கள் துரிதமாயும், பேசுவதிலும் கோபிப்பதிலும் தாமதமாயும் இருக்கவேண்டும்.
சாந்தமான பதில் கடுங்கோபத்தைத் தணிக்கும்;
ஆனால் கடுஞ்சொல்லோ கோபத்தைத் தூண்டுகிறது.
பொறுமையுள்ளவர் மிகுந்த புரிந்துகொள்ளுதல் உள்ளவர்;
ஆனால் முற்கோபக்காரர்கள் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
மதியீனர்கள் தம் கோபத்தை அடக்காமல் வெளிப்படுத்துகிறார்கள்;
ஆனால் ஞானமுள்ளவர்கள் அதை அடக்கிக் கொள்கிறார்கள்.
மூடர்கள் கோபத்தை உடனடியாக வெளிக்காட்டுவார்கள்,
ஆனால் விவேகிகள் ஏளனத்தைப் பொருட்படுத்தமாட்டார்கள்.
Irar-se sem pecar
Paulo ensina: irai-vos, mas não pequeis. Não deixe o sol se pôr sobre a vossa ira, para não dar lugar ao diabo.
"நீங்கள் உங்கள் கோபத்தில் பாவம் செய்யவேண்டாம்" (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்): பொழுது சாய்வதற்குள் உங்கள் கோபம் தணியட்டும். பிசாசுக்கு உங்கள் வாழ்வில் கால் வைக்க இடம் கொடாதிருங்கள்.
சண்டையைத் தவிர்த்துக்கொள்வது மனிதனுக்கு மேன்மை;
ஒவ்வொரு முட்டாளும் சண்டையிட விரைகின்றனர்.
அகந்தை வாக்குவாதங்களை பிறப்பிக்கிறது,
ஆனால் புத்திமதியை ஏற்றுக்கொள்கிறவர்களிடத்தில் ஞானம் காணப்படும்.
Amor e perdão acima da raiva
O amor cobre multidão de pecados. A Bíblia nos chama a não alimentar rancor, mas a perdoar e amar, vencendo a raiva com compaixão.
பகைமை பிரிவினையைத் தூண்டிவிடுகிறது;
அன்போ பிழைகளையெல்லாம் மன்னித்து மறக்கிறது.
அன்பு பொறுமையுள்ளது. அன்பு தயவுள்ளது. அன்புக்குப் பொறாமை இல்லை; அது தற்பெருமையுடன் பேசாது. அது அகந்தைகொள்ளாது. அன்பு இறுமாப்பு கொள்ளாது. அது சுயநலம் தேடுகிறதாய் இருக்காது. அது இலகுவில் கோபமடையாது. அன்பு மற்றவர்கள் தனக்குச் செய்த பிழைகளை நினைவில் வைக்காது.
" ‘உங்கள் இருதயத்தில் உங்கள் சகோதரனை வெறுக்க வேண்டாம். உங்கள் அயலானின் குற்றத்தில் நீங்களும் பங்குகொள்ளாதபடி அவனை வெளிப்படையாகக் கடிந்துகொள்ளுங்கள்.
" ‘பழிவாங்கத் தேடவேண்டாம். உங்கள் மக்களில் யாருக்கெதிராகவும் வன்மங்கொள்ள வேண்டாம். நீ உன்னில் அன்பாயிருப்பதுபோல் உன் அயலானிடத்திலும் அன்பாய் இரு. நானே யெகோவா.
இயேசு தொடர்ந்து: "ஒரு மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருகிறவைகள் அவரை ‘அசுத்தப்படுத்தும்.’ ஏனெனில், மனிதருடைய இருதயங்களிலிருந்தே முறைகேடான பாலுறவு, களவு, கொலை, விபசாரம், பேராசை, அநியாயம், வஞ்சகம், காமவெறி, பொறாமை, அவதூறு, கர்வம், மதிகேடு போன்ற தீய சிந்தனைகள் வருகின்றன; தீமையான இவை யாவும் உள்ளத்திலிருந்து வருகின்றன. இவையே, மனிதரை அசுத்தப்படுத்துகின்றன" என்றார்.
ஆகையால் பிரியமானவர்களே, உங்களில் ஒருவரும் ஜீவனுள்ள இறைவனிடமிருந்து வழிவிலகச் செய்கிறதான, விசுவாசமற்ற, பாவ இருதயம் உள்ளவனாய் இராதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
"ஒரு மனிதன் தன் மனைவியை விவாகரத்து செய்தபின்பு,
அவள் அவனைவிட்டு, போய் வேறொரு மனிதனைத் திருமணம் செய்தால்,
முந்திய கணவன் அவளிடம் திரும்பிப் போகலாமோ?
அவ்விதம் செய்தால் நாடு முழுவதும் கறைப்படுத்தப்பட்டுப் போகாதோ?
நீயோ பல காதலர்களுடன் வேசியாக வாழ்ந்திருக்கிறாய்.
இப்பொழுது என்னிடம் திரும்புவாயா?"
என்று யெகோவா அறிவிக்கிறார்.
"நீ மேலே நோக்கி வறண்ட மேடுகளைப் பார்.
நீ வேசித்தனம் செய்யாத இடமேதும் உண்டோ?
பாலைவனத்தின் நாடோடியைப்போல்,
காதலருக்காக தெருவோரங்களில் காத்துக்கொண்டிருந்தாய்.
உன்னுடைய வேசித்தனத்தினாலும்,
கொடுமையினாலும் நாட்டைக் கறைப்படுத்தினாய்.
இதனால் மழை வீழ்ச்சி தடைசெய்யப்பட்டு,
கோடை மழையும் பெய்யவில்லை.
அப்படியிருந்தும் நீ ஒரு வேசியின் நாணமற்ற தோற்றத்தை உடையவளாய் இருக்கிறாய்;
நீ வெட்கங்கொண்டு நாணமடைய மறுக்கிறாய்.
இப்பொழுதும் நீ என்னைக் கூப்பிட்டு,
‘என் பிதாவே, என் வாலிப காலத்திலிருந்து என் நண்பராயிருப்பவரே,
நீர் எப்போதும் கோபமாயிருப்பீரோ?
உமது பெருங்கோபம் என்றைக்கும் நீடித்திருக்குமோ?’ என்று கேட்கவில்லையா?
நீ பேசுவது இப்படித்தான்,
ஆனால் நீ உன்னால் முடிந்த தீமையையெல்லாம் செய்கிறாய்."
உண்மையற்ற இஸ்ரயேல்
யோசியா அரசனின் ஆட்சிக்காலத்தில் யெகோவா என்னிடம், "பின்மாற்றமடைந்த இஸ்ரயேல் செய்ததைக் கண்டாயா? அவள் ஒவ்வொரு உயர்ந்த குன்றின்மேலும், ஒவ்வொரு பச்சையான மரத்தின் கீழும் விபசாரம் பண்ணினாள். இவை எல்லாவற்றையும் செய்தபின்பாவது என்னிடம் திரும்பி வருவாள் என்று நினைத்தேன். ஆனால் அவளோ திரும்பி வரவில்லை. இதை அவளுடைய சகோதரியான யூதா என்ற துரோகியும் கண்டாள். பின்மாற்றமடைந்த இஸ்ரயேலுக்கு அவளுடைய எல்லா விபசாரங்களின் நிமித்தமும், அவளுக்கு விவாகரத்துச் சீட்டைக் கொடுத்து, அவளை அனுப்பிவிட்டேன். இருந்தும் அவளுடைய சகோதரியான யூதா என்ற துரோகி பயப்படாததை நான் கண்டேன். அவளும் வெளியே போய் விபசாரம் பண்ணினாள். இஸ்ரயேலின் ஒழுக்கக்கேடு யூதாவுக்கு மிகவும் அற்பமாய் இருந்தபடியால், அவளும் தன் நாட்டைக் கறைப்படுத்தி, கற்களோடும் மரத்தோடும் விபசாரம் பண்ணினாள். இப்படியெல்லாம் இருக்கையில் இஸ்ரயேலுடைய சகோதரியான யூதா என்ற துரோகி, வஞ்சகமாய் என்னிடம் திரும்பி வந்தாளேயல்லாமல், முழுமனதுடன் திரும்பி வரவில்லை" என்று யெகோவா அறிவிக்கிறார்.
யெகோவா என்னிடம் சொன்னதாவது: "துரோகியாகிய யூதாவைப் பார்க்கிலும் உண்மையற்ற இஸ்ரயேல் நீதியுள்ளவளாய் இருக்கிறாள். ஆகவே நீ போய் வடக்கு நோக்கி இந்தச் செய்தியைப் பிரசித்தப்படுத்து:
"பின்மாற்றமடைந்த இஸ்ரயேலே, திரும்பி வா" என்று யெகோவா அறிவிக்கிறார்.
"இனி ஒருபோதும் உங்கள்மேல் கோபத்தைக் காண்பிப்பதில்லை,
ஏனெனில் நான் இரக்கமுள்ளவர்" என்று யெகோவா அறிவிக்கிறார்.
"நான் என்றைக்கும் கோபமாயிருக்கமாட்டேன்.
உன் குற்றத்தை மாத்திரம் ஏற்றுக்கொள்.
நீ உன் இறைவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகக் கலகம் பண்ணினாய்.
ஒவ்வொரு பச்சையான மரத்தின் கீழும்,
அந்நிய தெய்வங்களுடன் சேர்ந்து கேடாக நடந்து
எனக்குக் கீழ்ப்படியாமல் போனாய்"
என்று யெகோவா அறிவிக்கிறார்.
"பின்மாற்றமடைந்த மக்களே! திரும்பிவாருங்கள்" என்று யெகோவா அறிவிக்கிறார். "ஏனெனில் நானே உங்கள் கணவன். நான் உங்களை ஒரு பட்டணத்திலிருந்து ஒருவனாகவும், ஒரு வம்சத்திலிருந்து இருவராகவும் தெரிந்தெடுத்து, உங்களைச் சீயோனுக்குக் கொண்டுவருவேன். என் இருதயத்திற்கு ஏற்ற மேய்ப்பர்களை உங்களுக்குத் தருவேன். அவர்கள் அறிவோடும், விவேகத்தோடும் உங்களை வழிநடத்துவார்கள். அந்நாட்களில் நாட்டில் உங்கள் எண்ணிக்கை மிகுதியாய் பெருகியிருக்கும்" என்று யெகோவா அறிவிக்கிறார். அப்பொழுது மனிதர்கள், யெகோவாவினுடைய உடன்படிக்கைப் பெட்டியைப்பற்றி ஒருபோதும் பேசமாட்டார்கள். அதைப்பற்றி ஒருபோதும் அவர்கள் எண்ணுவதோ நினைப்பதோ இல்லை; அதைக் குறித்த மனவருத்தமும் அவர்களுக்கு ஏற்படாது. அதுபோல வேறொன்று செய்யப்படுவதும் இல்லை. அக்காலத்தில் எல்லா மக்களும் எருசலேமை யெகோவாவினுடைய சிங்காசனம் என்று கூறுவார்கள். யெகோவாவின் பெயரை மகிமைப்படுத்துவதற்காக எருசலேமில் ஒன்று கூடுவார்கள். தொடர்ந்து அவர்கள் தங்களுடைய தீமையான இருதயங்களின் பிடிவாதத்துடன் நடக்கமாட்டார்கள். அந்நாட்களில் யூதா வம்சத்தார், இஸ்ரயேல் வம்சத்தாருடன் ஒன்றுசேருவார்கள். அவர்கள் வடதிசையிலுள்ள நாட்டிலிருந்து நான் உங்கள் முற்பிதாக்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்த நாட்டுக்கு வருவார்கள்.
"நான்,
" ‘உங்களை எவ்வளவு சந்தோஷமாக
என் சொந்தப் பிள்ளைகளைப்போல் நடத்துவேன்;
எந்த நாட்டினுடைய உரிமைச்சொத்தைப் பார்க்கிலும்,
மிக நலமான விரும்பத்தக்க ஒரு நாட்டை உங்களுக்குக் கொடுப்பேன்’
என்று நான், நானே சொன்னேன்.
நீங்கள் என்னை, ‘பிதாவே’ என்று அழைப்பீர்கள் என்றும்,
என்னைப் பின்பற்றுவதை விட்டுத் திரும்பமாட்டீர்கள்
என்றும் நான் நினைத்திருந்தேன்.
ஆனாலும் இஸ்ரயேல் வீட்டாரே, தன் கணவனுக்கு
உண்மையற்று இருக்கும் ஒரு பெண்ணைப்போல,
நீங்கள் எனக்கு உண்மையற்று இருந்தீர்கள்" என்று யெகோவா சொல்கிறார்.
வறண்ட மேடுகளில் அழுகை கேட்கிறது;
இஸ்ரயேல் மக்களின் அழுகையும் வேண்டுதலுமே அது.
ஏனெனில் அவர்கள் தங்கள் வழிகளைச் சீர்கேடாக்கி
தங்கள் இறைவனாகிய யெகோவாவை மறந்துவிட்டார்கள்.
"உண்மையற்ற மக்களே திரும்பிவாருங்கள்;
நான் உங்கள் பின்மாற்றத்தைக் குணமாக்குவேன்" என்று யெகோவா சொல்கிறார்.
அதற்கு மக்கள், "ஆம்,
நீரே எங்கள் இறைவனாகிய கர்த்தராயிருப்பதால் நாங்கள் உம்மிடம் வருவோம்.
குன்றுகளிலும் மலைகளிலும் செய்துவந்த விக்கிரக வழிபாட்டின் ஆரவாரம்,
உண்மையில் ஒரு ஏமாற்றுச் செயலே;
இஸ்ரயேலின் இரட்சிப்பு நிச்சயமாக எங்கள்
இறைவனாகிய யெகோவாவிலேயே இருக்கிறது.
எங்கள் வாலிப காலத்திலிருந்து,
எங்கள் முற்பிதாக்களின் உழைப்பின் பலனான ஆட்டு மந்தைகளையும்,
மாட்டு மந்தைகளையும், அவர்களின் மகன்களையும்,
மகள்களையும் வெட்கக்கேடான தெய்வங்கள் விழுங்கிவிட்டன.
நாங்கள் எங்கள் வெட்கத்திலேயே கிடப்போம்,
எங்கள் அவமானம் எங்களை மூடிக்கொள்ளட்டும்.
நாங்களும் எங்கள் முற்பிதாக்களும் எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு
எதிராகப் பாவம் செய்திருக்கிறோம்,
நாங்கள் எங்கள் இளமைப் பருவத்திலிருந்து இன்றுவரை
எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக்
கீழ்ப்படிந்திருக்கவில்லை" என்றார்கள்.