Publicidade

Isaías 12

துதியின் பாடல்கள்

1 அக்காலத்திலே நீ சொல்வது:

"யெகோவாவே, நான் உம்மைத் துதிப்பேன்;

நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கியது;

நீர் என்னைத் தேற்றுகிறீர்.

2 இதோ, தேவனே என் இரட்சிப்பு;

நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்;

கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்;

அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.

3 நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து

மகிழ்ச்சியுடன் தண்ணீர் மொண்டுகொள்வீர்கள்.

4 அக்காலத்திலே நீங்கள் சொல்வது:

யெகோவாவை துதியுங்கள்;

அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்;

அவருடைய செய்கைகளை மக்களுக்குள்ளே அறிவியுங்கள்;

அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம் செய்யுங்கள்.

5 யெகோவாவைக் கீர்த்தனம்செய்யுங்கள்,

அவர் மகத்துவமான செயல்களைச் செய்தார்;

இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள்.

6 சீயோனில் குடியிருக்கிறவளே,

நீ சத்தமிட்டுக் கெம்பீரி;

இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்."

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_10-32-54-