17 திருச்சபையை நன்றாய் நடத்தும் தலைவர்கள் இரட்டிப்பான மதிப்பிற்குரியவர்களாகக் கருதப்பட வேண்டும். விசேஷமாக பிரசங்கம் பண்ணுவதிலும், போதிப்பதிலும் ஈடுபடும் தலைவர்களை பாத்திரராக எண்ணவேண்டும். 18 ஏனெனில், "தானியக்கதிரை போரடிக்கும் எருதின் வாயைக் கட்டவேண்டாம்"5:18 உபா. 25:4 என்றும் "வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரவானாயிருக்கிறான்"5:18 லூக். 10:7 என்றும், வேதவசனம் சொல்லுகிறதே.