4 சந்ததிகள் தோன்றி, சந்ததிகள் மறைகின்றன;
ஆனாலும் பூமி மட்டும் என்றென்றைக்கும் நிலைத்திருக்கின்றது.
5 சூரியன் உதிக்கிறது, சூரியன் மறைகிறது;
தான் உதிக்கும் இடத்திற்கே அது விரைந்து திரும்பிச் செல்கிறது.
6 காற்று தெற்கு நோக்கி வீசுகிறது,
வடக்கு நோக்கியும் திரும்புகிறது;
அது சுழன்று சுழன்று அடித்து,
எப்போதும் தான் சுற்றிவந்த இடத்திற்கே திரும்பிச் செல்கிறது.
7 எல்லா ஆறுகளும் கடலில் கலக்கின்றன,
ஆனாலும் கடல் ஒருபோதும் நிறைவதில்லை.
ஆறுகள் ஊற்றெடுத்த இடத்திற்கே
திரும்பிப் போகின்றன.